ஜப்பானில் உள்ள Hibaku Jumoku எனப்படும் மரத்துக்கு உலகிலுள்ள வேறெந்த மரத்துக்கும் இல்லாத சிறப்பு காணப்படுகிறது. 6ம் தேதி ஆகஸ்ட் 1945, இல் ஹிரோஷிமாவில் அணுகுண்டு போடப்பட்ட போது நகரமே அழிந்ததுடன் பலவருடங்களுக்கு புல் பூண்டுகளே முளைக்காமல் போனது.
ஆனால் Hibaku Jumoku என்ற மரமானது சுமார் 75 வருடங்களுக்கு மேலாக அதாவது அணுகுண்டு போடப்பட முன்பிலிருந்து இன்றுவரை உறுதியாக நிற்கிறது, இன்று ஹிரோஷிமா சோலையாக பூத்துக் குலுங்கினாலும் இவையெல்லாம் கடந்த 50 ஆண்டுகாலப் பகுதியில் உருவானவை .
இதை A bombed tree என்று காரணப்பெயர் கொண்டும் சிலர் அழைப்பர், மிக குறைந்த அளவே காணப்படும் Hibaku Jumoku மரங்களை ஜப்பான் கவனமாக பாதுகாத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.






