நாம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமானால் இரவில் நன்றாக தூங்கி அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். இதற்கு துணைபுரியும் முக்கிய பொருளில் முதன்மையாக இடம்பெறுவது கட்டில் மெத்தை(படுக்கை) என்றால் அது மிகையாகாது.
இந்த வகையில் இங்கிலாந்து நாட்டு நிறுவனம் ஒன்று உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த படுக்கையை(பெட்) தயாரித்து இருக்கிறார்கள். இந்த ராயல் படுக்கையானது 17–வது மற்றும் 18–வது நூற்றாண்டுகளில் அரச குடும்பத்தினர் பயன்படுத்திய படுக்கையை பிரதிபலிக்கும் விதமான அமைந்துள்ளது. இதன் விலை எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 1¾ லட்சம் டாலர்கள் (ரூ.90 லட்சம்) ஆகும்.
விலை உயர்ந்த பட்டுத்துணி, மங்கோலியா ஆடுகளின் ரோமம், குதிரை வால் ரோமம் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரித்திருக்கிறார்கள். இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி அலிஸ்டைர் ஹூக்ஸ் கூறுகையில், இந்த ராயல் விசேஷ படுக்கையை உரிமையாக்கி கொள்வது அரிய வாய்ப்பு. மொத்தமே 60 படுக்கை தான் தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.