தாய்மைக்கு நிகராக பெற்ற மகன் தாயானான் ...


முடிந்தவரை பகிருங்கள்  share அதுவே விழிப்புணர்வு தாய்மைக்கு நிகராக பெற்ற மகன் தாயானான் ...இதற்க்கு தங்கள் கருத்து வாழ்த்துங்கள் ..போற்றுங்கள் 
 

இந்தப் படத்தை பார்க்கும்பொழுது மனசுக்கு நெகிழ்ச்சியா இருக்கு..


சின்ன சின்ன சண்டைக்கெல்லாம் விவாகரத்து கேக்குற உலகத்துல இப்படியும் ஒரு அன்பானகுடும்பம் ... உண்மையான அன்பு எதையும் எதிர்பார்க்காது...! 

மாதவரம்: சூட்கேசில் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது

மாதவரம்: சூட்கேசில் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்ததுமாதவரம், மார்ச் 27- 

மாதவரம் பால் பண்ணை அருகே 100 அடி சாலையில் கொசப்பூர் சந்திப்பு அருகே முட்புதருக்குள் நேற்று முன்தினம் இரவு சூட்கேஸ் ஒன்று அனாதையாக கிடந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. 

போலீஸ் உதவி கமிஷனர் சங்கரலிங்கம், மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசியப்பன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சூட்கேசை உடைத்து பார்த்த போது அதில் ஒரு பெண்ணின் உடல் இருந்தது. அந்த பெண்ணின் முகம் மிகவும் சிதைந்து இருந்தது. 

அவரை மர்ம ஆசாமிகள் கொலை செய்து பிணத்தை சூட்கேசில் மடக்கி வைத்து புதரில் வீசிச் சென்றது தெரிய வந்தது. பிணமாக கிடந்த பெண் நீலநிற சுடிதார் மேலாடையும், லுங்கி போன்ற உடையும் அணிந்திருந்தார். அவர் யார் என்று சுற்றுப்புற பகுதிகளில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

மேலும் காணாமல் போன பெண்கள் பற்றிய புகார் ஏதும் போலீஸ் நிலையங்களில் உள்ளதா? என்றும் விசாரித்தனர். இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை போலீசில் அபிதா பீவி என்ற பெண் காணாமல் போனதாக கடந்த 23-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. 

அவரது உறவினர்களை அழைத்து சென்று பிணத்தை காட்டினார்கள். அப்போது கொலை செய்யப்பட்டது அபிதாபீவி (வயது 65) என்று தெரியவந்தது. இவர் பழைய வண்ணாரப்பேட்டை, பகதூர் திவான் தெருவைச் சேர்ந்த முகமது மொய்தீன் என்பவரது மனைவி ஆவார். 

அபிதாபீவி கடந்த 17-ந் தேதி வீட்டில் இருந்து காணாமல் போனார். இதுபற்றி அவரது மகன் முபாரக் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிதாபீவியை தேடி வந்தனர். 

இந்த நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். அபிதாபீவி காணாமல் போன அன்று 4 பவுன் நகை அணிந்திருந்தார். எனவே அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்று தெரியவில்லை. 

அபிதாபீவி கொலை தொடர்பாக அவரது வீடு அருகில் வசிக்கும் 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கொலை பற்றி அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பவானி ஆற்றில் திடீர் வெள்ளம் : நீரில் மூழ்கி 4 பேர் சாவு

பவானி ஆற்றில் திடீர் வெள்ளம் : நீரில் மூழ்கி 4 பேர் சாவுபவானி, மார்ச் 27- 

ஈரோடு மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் இன்று சிலர் குளித்துக்கொண்டிருந்தனர். ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடியதால் ஆற்றின் நடுப்பகுதிக்குச் சென்று உற்சாகமாக குளித்தனர். 

இந்நிலையில் இன்று பில்லூர் அணை திறக்கப்பட்டது. இதனை அறியாத பொதுமக்கள் ஆற்றில் திடீரென வெள்ளம் வந்ததும் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். ஆனால், நடுப்பகுதியில் இருந்து தப்பி வர முடியாத ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிலரை வெள்ளம் அடித்துச் சென்றது. 

அவர்களில், ரவிச்சந்திரன் என்பவரின் மனைவி ராணி, மகள் ராஜேஸ்வரி மற்றும் ராஜேஸ்வரியின் இரண்டு குழந்தைகள் ஆகியோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். ரவிச்சந்திரன் நீந்தி கரையேறினார். உயிரிழந்தவர்களில் ராணி, ராஜேஸ்வரி மற்றும் ஒரு குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. மேலும் ஒரு குழந்தையின் உடலை தேடி வருகிறார்கள். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோயைத் தடுக்கும்: இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு


லண்டன், மார்ச் 27-

இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 3,80,000 மக்களுக்கு மேல் பரிசோதித்ததில், தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன்மூலம், பெண்கள் புற்று நோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றது. அதேபோல் இவர்களுக்கு மாரடைப்பினால் ஏற்படும் மரணமும், 17 சதவிகிதம் குறைகின்றது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கூறப்படும் வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன்மூலம், பல நோய்களிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.

உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதி மையமும், அமெரிக்காவின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமும் கூறியுள்ள வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன்மூலம் ஒருவர் 34 சதவிகிதம் தம்மை நோயிலிருந்து காத்துக்கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வழிமுறைகள் வருமாறு:

ஆரோக்கியமான உடல் எடை, சுறுசுறுப்பாக இருத்தல், உடல் எடையைக் கூட்டும் உணவுப்பொருட்கள் பானங்களைத் தவிர்த்தல், தாவர உணவு வகைகளையே அதிகம் உட்கொள்ளுதல், மாமிசம் மது அருந்துவதைத் தவிர்த்தல் மற்றும் 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் அளித்தல் ஆகும்.

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் தெரிசா நோரட் இந்த ஆராய்ச்சியை வழி நடத்தியவர். இந்த வழிமுறைகளை பின்பற்றுவோருக்கு புற்றுநோய், ரத்த ஓட்டம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அவர் உறுதி கூறுகின்றார்.

சென்னையில் இலங்கை வீரர்கள் ஆட அனுமதி இல்லை: முரளீதரன் வேதனை

சென்னையில் இலங்கை வீரர்கள் ஆட அனுமதி இல்லை: முரளீதரன் வேதனைகொழும்பு, மார்ச். 27-


சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஐ.பி.எல். அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினை காரணமாக தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பு காரணமாகவே இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. 

இதுகுறித்து இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீரரும், இலங்கை தமிழருமான முரளீதரன் கூறியதாவது:- 

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் துரதிருஷ்ட வசமானது. சென்னையில் நாங்கள் விளையாடுவதை விரும்பாததால் நாங்களும் சென்னை செல்ல விரும்ப வில்லை. இந்தியாவில் உள்ள ஒரு பகுதியில் நாங்கள் விளையாட அனுமதிக்கப்படாதது என்பது கிரிக்கெட்டுக்கு சோகமான நாளாக கருதுகிறேன்.

இது அரசின் முடிவாகும். நான் பெங்களூர் அணியில் விளையாடுகிறேன். நான் அங்கு செல்ல எந்த பிரச்சினையும் இல்லை. சென்னை அல்லாத இடங்களில் நாங்கள் விளையாடுவோம். இதோடு இந்த உலகம் முடிந்து விடவில்லை. வரும் காலங்களில் சென்னையில் ஆடுவோம். 

சென்னை எனது 2-வது தாய் வீடாகும். எனது மனைவி மதிமலர் அங்குதான் இருக்கிறார். நான் தமிழன் என்றாலும் இலங்கையை சேர்ந்தவன் தான் என்பதை முதலில் கொண்டுள்ளேன். போருக்கு பிறகு தமிழர்கள் அமைதியாக, சந்தோஷமாக வாழ்கிறார்கள்.


இவ்வாறு முரளீதரன் கூறினார். 

இங்கிலாந்தில் 17 வயது சிறுவன் கோடீஸ்வரனான அதிசயம்


இங்கிலாந்தில் 17 வயது சிறுவன் கோடீஸ்வரனான அதிசயம்இங்கிலாந்தில் உள்ள லண்டனை சேர்ந்த நிக்டி அலோஸ்சிகா என்ற 17 வயது சிறுவன் செல்போனில் செய்தி வாசிக்கும் முறையை (மொபைல் நியூஸ் ரீடர் ஆப்சன் சம்லி) கண்டுபிடித்து இருக்கிறான். அதை 'யாகூ' செய்தி நிறுவனம் அவனிடம் இருந்து வாங்குகிறது.
அதற்காக அவனுக்கு ரூ.165 கோடி முதல் ரூ.330 கோடி வரை வழங்க தயாராக உள்ளது. மேலும் யாகூ நிறுவனத்திலும் அவனுக்கு வேலை வழங்கப்படுகிறது.
இதன் மூலம் மிக இளம் வயதில் தனது முயற்சியால் கோடீஸ்வரராகும் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறான்.


தோழின் மனதை கவர கத்திக்குத்து நாடகம்



தோழியை காதலியாக்க கத்திக்குத்து நாடகம்அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஜோன்ஸ் போரோ நகரைச் சேர்ந்தவர் ஜெப்ரி டைகர் சீகல். இவர் தன் தோழியின் மனதைக் கவர முடிவு செய்தார்.
அதன்படி, அப்பெண்ணுடன் நடந்து செல்லும் வழியில், தன் நண்பரை கத்தியுடன் வருமாறு கேட்டுக்கொண்டார். திட்டத்தின்படி சாலையில் திடீரென வழிமறித்த "மர்ம நபர்" கத்தியைக் காட்டி அப்பெண்ணை தன்னிடம் விட்டு ஓடிவிடுமாறு மிரட்டினார்.
ஜெப்ரி சினிமா கதாநாயகன் போல், அந்த நபருடன் சண்டை போடத் துவங்கும் முன் அவரது தோழி அலறியடித்து ஓட்டம் பிடித்தார். திட்டம் தோல்வி அடைந்தாலும் சமாளிக்க எண்ணிய அவர் தன் உடலில் சிறு காயங்கள் ஏற்படுத்திக் கொண்டார். அவரது நண்பரும், கத்தியுடன் ஓடி மறைந்தார்.
இதற்கிடையில் அப்பெண் போலிசை தொடர்பு கொண்டார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலிசார் சல்லடை போட்டு தேடியும் குற்றவாளி கிடைக்கவில்லை.
விசாரணையில் உண்மை வெளிவந்தது. இருவரும் நடந்து சென்றபோது, ஜெப்ரி தன் நண்பருக்கு மொபைலில், மெசேஜ் அனுப்பியதை ஒப்புக் கொண்டார்.
தன் தோழியின் மனதை எப்படியாவது கவர வேண்டும் என்பதற்காகவே, இவ்வாறு செய்ததாகக் கூறிய ஜெப்ரி மீது பரிதாபப்பட்டு போலிசார் வழக்கு தொடராமல் அவரை மன்னித்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த ராயல் படுக்கையின் விலை ரூ.90 லட்சமாம்!...

இந்த ராயல் படுக்கையின் விலை ரூ.90 லட்சமாம்!...நாம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமானால் இரவில் நன்றாக தூங்கி அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். இதற்கு துணைபுரியும் முக்கிய பொருளில் முதன்மையாக இடம்பெறுவது கட்டில் மெத்தை(படுக்கை) என்றால் அது மிகையாகாது.
இந்த வகையில் இங்கிலாந்து நாட்டு நிறுவனம் ஒன்று உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த படுக்கையை(பெட்) தயாரித்து இருக்கிறார்கள். இந்த ராயல் படுக்கையானது 17–வது மற்றும் 18–வது நூற்றாண்டுகளில் அரச குடும்பத்தினர் பயன்படுத்திய படுக்கையை பிரதிபலிக்கும் விதமான அமைந்துள்ளது. இதன் விலை எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 1¾ லட்சம் டாலர்கள் (ரூ.90 லட்சம்) ஆகும்.
விலை உயர்ந்த பட்டுத்துணி, மங்கோலியா ஆடுகளின் ரோமம், குதிரை வால் ரோமம் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரித்திருக்கிறார்கள். இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி அலிஸ்டைர் ஹூக்ஸ் கூறுகையில், இந்த ராயல் விசேஷ படுக்கையை உரிமையாக்கி கொள்வது அரிய வாய்ப்பு. மொத்தமே 60 படுக்கை தான் தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குரைப்பதில் கின்னஸ் சாதனை படைத்த நாய்


குரைப்பதில் கின்னஸ் சாதனை படைத்த நாய் கோல்டன் ரெட்ரீவர் வகை நாய் ஒன்று 113 டெசிபல் ஒலியுடன் குரைத்து கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரைச் சேர்ந்த பெலிண்டா ப்ரீபெரன் என்பவர் கோல்டன் ரெட்ரீவர் வகை நாயை வளர்த்து வருகிறார்.
6 வயதான அந்த நாய்க்கு சார்லி என்று பெயரிட்டுள்ளார். அந்த நாய் ஒரு போட்டியில் 113.1 டெசிபல் அளவுக்கு ஒலியுடன் குரைத்து பார்வையாளர்களை அச்சுறுத்தியது.
இவ்வளவு ஒலியுடன் குரைத்ததன் மூலம் சார்லி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. லண்டனை சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று, 2009ம் ஆண்டில் 108 டெசிபல் அளவுக்கு குரைத்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
நாயின் உரிமையாளர் ப்ரீபெரன் கூறுகையில், ''சார்லி குரைத்தால் எழும் ஒலி ராக் இசையின் போது எழும் ஒலி, இரும்பு ஆலைகளில் வெளிப்படும் ஒலி ஆகியவற்றை விடவும் அதிகம். சார்லியால் எங்களுக்கு எந்த தொல்லையும் இல்லை. அது நாங்கள் கட்டளையிட்டால் மட்டுமே குரைக்கும். மற்ற நேரங்களில் சமத்தாக அமைதியாக இருக்கும். கின்னஸ் உலக சாதனை புரிந்தது எங்களுக்கெல்லாம் பெருமையாக உள்ளது'' என்றார்.
பொதுவாக மனிதர்கள் பேசும் ஒலி 60 டெசிபல் அளவு இருக்கும். சில விலங்குகள் சுரங்கப்பாதையில் ரயில் செல்லும்போது எழும் (100 டெசிபல்) ஒலியை விட அதிக ஒலியை எழுப்பும்.

இண்டேன் வாடிக்கையாளர் புகாருக்கு புதிய தொலைபேசி வசதி

சென்னை: காஸ் கசிவு குறித்து, வாடிக்கையாளர்கள் புகார் செய்ய, கட்டணமில்லா தொலைபேசி வசதியை, ஐ.ஓ.சி., துவங்கி உள்ளது. இண்டேன் நிறுவன வாடிக்கையாளர்கள், சமையல் காஸ் சிலிண்டர் கசிவு உள்ளிட்ட புகார்களை, அவர்களின், முகவர் நிறுவனத்திடம் அளித்து வருகின்றனர். இதற்காக, மூன்று அலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள சில நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்கள், காஸ் கசிவு தொடர்பாக, எந்த நேரத்திலும் புகார் செய்யலாம்.

மாநில அளவிலான கட்டணமில்லா தொலைபேசி வசதியை, ஐ.ஓ.சி., நிறுவனம் துவங்கியது. 1800-425-247-247 என்ற இந்த தொலைபேசி எண், வார நாட்களில், மாலை, 5:00 மணி முதல், மறுநாள் காலை, 9:00 மணி வரையிலும், ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில், 24 மணி நேரமும் செயல்படும். வாடிக்கையாளர்கள், தங்களின் இணைப்பு எண் உள்ளிட்ட, அடிப்படை தகவல்களுடன், தங்கள் புகாரை, இந்த எண்ணில் தெரிவித்தால், அதன் மீது, உடனடியாக, நடவடிக்கை எடுக்கப்படும். காஸ் கசிவு அல்லாத பிற புகார்களை, வாடிக்கையாளர்கள் வழக்கம் போல், தங்கள் வினியோகிஸ்தர்களிடம் தெரிவிக்க வேண்டும். இத்தகவலை, ஐ.ஓ.சி., நிறுவன நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தி; மன்மோகன் - புடின் ஆலோசனை


Top newsடர்பன்: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை அடுத்த மாதம் முதல் செயல்பட துவங்கும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் டர்பன் சென்றுள்ளார். நேற்று இரவு பிரதமர் மன்மோகன் சிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை அடுத்த மாதம் முதல் செயல்பட துவங்கும். 
கூடங்குளத்தில் அமைக்கப்படும் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைக்கான ஒப்புதல் கிடைக்கப்பெறும். மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலை செயல்படுத்துவதற்கான இருநாட்டின் ஒத்துழைப்பு தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார். 

கடந்த வருடம் டில்லி வந்த போது சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ரஷ்ய அதிபர் புடின் நன்றி தெரிவித்து கொண்டார். மேலும் அவர், ரஷ்யாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.


இந்தியா திருப்தி:

இதற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், ரஷ்ய அதிபரை சந்திப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் இந்தியா தவற விடாது. இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்பு, உறவு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்தியா திருப்தியடைகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் திட்டங்கள் தொடர இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை, ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார் இவ்வாறு அவர் கூறினார்.


அடுத்த மாதம் 10ந் தேதி அறிமுகமாகிறது நின்ஜா 300!

Kawasaki Ninja 300அடுத்த மாதம் 10ந் தேதி நின்ஜா 300 ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகப்படுத்துகிறது கவாஸாகி-பஜாஜ் கூட்டணி. இந்த புதிய பைக் தற்போது விற்பனையில் இருக்கும் நின்ஜா 250ஆர் பைக்குக்கு மாற்றாக வருகிறது. 

பஜாஜ் ஆட்டோவின் புரொபைக்கிங் ஷோரூம்கள் வாயிலாக இந்த புதிய பைக் விற்பனை செய்யப்பட உள்ளது. அசத்தலான ஸ்டைலுடன் வரும் இந்த புதிய பைக் கவாஸாகியின் இசட்எக்ஸ் 10ஆர் பைக்கின் டிசைன் தாத்பரியங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

நின்ஜா 300 பைக்கில் 296சிசி லிக்யூட் கூல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 39 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், உயர் ரக மோட்டார்சைக்கிளில் எஞ்சின் பிரேக்கிங்குக்கு உதவும் ஸ்லிப்பர் கிளட்சும் (ஸ்லைடர் கிளட்ச் என்றும் கூறுவர்) கூடுதல் தொழில்நுட்ப அம்சமாக கூறலாம்.


இந்த பைக்கில் டூயல் ஹெட்லைட் பொருத்தப்பட்டிருக்கிறது.


எஞ்சின் சூட்டை தணிப்பதற்காக பெரிய ஏர் வென்ட்டுகள் மற்றும் ரேடியேட்டர் ஃபேன் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.


புதிய நின்ஜா 300 பைக்கில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், அனலாக் ஆர்பிஎம் மீட்டரும் பொருத்தப்பட்டிருக்கிறது.


காற்றை கிழித்துச் செல்ல ஏதுவாக பெரிய வைன்ட் ஷீல்டை கொண்டிருக்கிறது.

நின்ஜா 300 பைக்கில் முன்புறம் 37மிமீ டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் சாலைகளை எதிர்கொள்ள துணைபுரியும்.


முன்புறத்தில் 290மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.


ரூ.4 லட்சம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

''மைனாரிட்டியில் 2 மணி நேரம் மின்வெட்டு.. மெஜாரிட்டியில் 16 மணி நேரம்.. வெட்கம் இல்லையா''?!

 Assembly Debates Power Cut சென்னை: சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் மைனாரிட்டி அரசு, மெஜாரிட்டி அரசு பற்றி காரசார விவாதம் நடைபெற்றது. மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ''மெஜாரிட்டி அரசில் மின்வெட்டு 16 மணி நேரமாக இருக்கிறது. வெட்கம் இல்லையா?" என்று கேட்டார். 

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றபோது மின்வெட்டு பிரச்சனையும் பேசப்பட்டது. "அதிமுக ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் நிலவும் மின் பிரச்னை தீர்க்கப்படும்; தமிழகம் மின் மிகை மாநிலமாகும் என்றனர். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. எங்கே மின்சாரம்?" என்று தி.மு.க. உறுப்பினர் எ.வ.வேலு கேள்வி எழுப்பினார். 

இதற்கு, அ.தி.மு.க. உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. என்றாலும் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதில் சொல்ல எழுந்தார். "இதற்கு முன் நடந்த ‘மைனாரிட்டி' தி.மு.க. ஆட்சியில், மின்சாரத்துக்கு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை. குடும்ப பிரச்சனை உட்பட பல பிரச்சனைகள் இருந்ததால், அதை சரிசெய்யவே தி.மு.க.விற்கு காலம் போய்விட்டது. இதனால், மாநிலத்தின் மின் பிரச்சனையை தீர்க்க அவர்களால் முடியவில்லை" என்றார். 

இவரது இந்த பதிலுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கோபத்தோடு எழுந்து பேசினார். "மின்துறை அமைச்சர், கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், எதற்கோ பதில் சொல்கிறார். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘தேர்தல் முடிந்து, முதல் பட்ஜெட்டில், 2012 ஆகஸ்ட்டிற்குள் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறும்' என கூறப்பட்டுள்ளது. இப்போது, மின்வெட்டு பிரச்சனைக்கு, ‘மைனாரிட்டி' தி.மு.க. அரசு காரணம் என்கிறீர்கள். 

சரி. நாங்கள், ‘மைனாரிட்டி' என்பதை மறுக்கவில்லை. ஆனால், ‘மைனாரிட்டி'' அரசில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ‘மெஜாரிட்டி' அரசில், 16 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. வெட்கமா இல்லையா? என்றார் ஸ்டாலின். 

தைவானில் 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்: 20 பேர் படுகாயம்

தாய்பே: தைவானில் இன்று அதிகாலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 20 பேர்வரை காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கிழக்கு ஆசிய நாடான தைவானின் மத்தியப் பகுதிக்கு அருகே, பூமிக்கு அடியில் 15 கிலோமீட்டரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகிவுள்ளதாக அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. உயிர் மற்றும் பொருள் இழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை எனினும் 20 பேர்வரை காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. 

நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்தனர். வீடுகளை விட்டு அவசரம் அவசரமாக வெளியேறியனர். நில நடுக்கத்தின் போது லிப்ட்டில் மாட்டிக்கொண்டவர் அச்சமடைந்தனர். 

தைவான், நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் பகுதியில் உள்ளது. இதனால் இந்நாட்டில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. கடந்த 1999-ம் வருடம் 7.2 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் தாக்கியது. இதில் 2400 பேர் இறந்தனர், மேலும் 50 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

6 'சஸ்பென்ட்' தேமுதிக எம்.எல்.ஏக்கள் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியாது!

 Suspended Dmdk Mlas Can T Vote Rajya Sabha Election டெல்லி: தமிழக சட்டசபையில் இருந்து 6 மாத காலத்துக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கும் 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியாது என்பது உறுதியாகி இருக்கிறது. 

சஸ்பெண்ட் விவகாரத்தில் சட்டசபையில் எப்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்ற அடிப்படையில்தான் ராஜ்யசபா தேர்தலில் சஸ்பென்ட் எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பது தீர்மானிக்கப்படுகிறது. வழக்கமாக சபை நடவடிக்கைகளில் இவ்வளவு காலத்துக்கு பங்கேற்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அவர்கள் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். 

ஆனால் தமிழக சட்டசபையிலோ சஸ்பென்ட் காலத்தில் 'எம்.எல்.ஏ' என்ற தகுதியையே பயன்படுத்த முடியாது.. அவர்களுக்கான அனைத்து சலுகைகளையும் அனுபவிக்க முடியாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனை சுட்டிக்காட்டும் பார்லிமென்ட் செயலக அதிகாரிகள், இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் சஸ்பென்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று கூறுகின்றனர். இருப்பினும் தேர்தல் ஆனையமே இறுதி முடிவு எடுக்கும் அன்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

சவுதி அரேபியாவில் தீ விபத்து: ஏழு இந்தியர்கள் உயிரிழந்தனர் !

ரியாத்: சவுதி அரேபியாவில் ஹைல் நகருக்கு அருகில்  ஆயன் என்ற இடத்தில் நாற்காலி தயாரிக்கும் நிறுவனத்தில்  இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 இந்தியர்கள் உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்களில் சித்தீக், குட்டன், லாலு உள்ளிட்ட ஆறு நபர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மற்றும் பெருந்தலமன்னா மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஒருவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்.

இந்நிறுவனம் கேரள மாநிலம் எடக்கரா பகுதியை சேர்ந்த சாஜி என்பவருக்கு சொந்தமானது. இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

4 சிறுநீரகங்கள், 3 கணையங்களுடன் வாழும் அதிசய மனிதன்


4 சிறுநீரகங்கள், 3 கணையங்களுடன் வாழும் அதிசய மனிதன்பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கார்ல் ஜோன்ஸ் என்பவர் 4 சிறுநீரகங்கள் மற்றும் 3 கணையங்களுடன் பல அறுவைச் சிகிச்சைகள் மேற்கொண்டும் தற்பொழுது ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றார்.
இளமைக்காலத்தில் டைப்- 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவரின் உறுப்புகள் செயலிழந்துள்ளதையடுத்து ஜோன்ஸ் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளார். எனவே இவருக்கு சிறுநீரக மற்றும் கணைய மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் தீர்மானித்தனர்.
வேல்ஸ் மருத்துவமனையில் இதற்கான சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளார். ஆரம்பத்தில் இவரது பழைய உறுப்புகளை மாற்றி புதியவற்றை பொருத்தவே மருத்துவர்கள் தீர்மானித்திருந்தனர்.
ஆனால் அவ்வாறு செய்வதால் உடலில் வேறு எதுவும் பாதிப்புகள் ஏற்படலாம் எனக் கருதிய மருத்துவர்கள் அவற்றை அகற்றாமல் புதிய உறுப்புகளை பொருத்தியுள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு இவருக்கு கணைய மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைப்பெற்றுள்ளது. பல அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டும் தற்போது இவர் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றார்.

அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய உலகின் மிக நீளமான ஆடை


அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய உலகின் மிக நீளமான ஆடைஇங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஹென்றி ஹோண்ட் (29) உலகிலேயே மிக நீளமான ஆடையை தயாரித்துள்ளார். கவுன் வடிவிலான அந்த ஆடை 1500 சதுர அடி அகலமும், 150 அடி நீளமும் கொண்டது. பட்டினால் தயாரிக்கப்பட்ட அந்த கவுனில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆடை அறிமுக நிகழ்ச்சி லண்டனில் உள்ள டிரின்ட்டி லீட்ஸ் ஷாப்பிங் சென்டரில் நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் மத்தியல் ஒரு ராட்சத பரிசு பெட்டியில் இருந்து பிரபல மாடல் அழகி கோலெட் மார்ரோ தோன்றினார். அவர் ஹென்றி ஹேலண்ட் வடிவமைத்திருந்த அந்த கவுனை அணிந்து இருந்தார். அந்த ஆடை விழாவில் பங்கேற்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இது குறித்து ஆடை வடிமைப்பாளர் ஹென்றி ஹோலண்டே கூறும்போது, 'பூச்சிகள் அவற்றின் சிறகுகளே இந்த ஆடை தயாரிக்க என்னை தூண்டின' என்று தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற பிரபலங்களின் குழந்தைகளுக்கான பேஷன் ஷோ...!!


லண்டனில் நடைபெற்ற பிரபலங்களின் குழந்தைகளுக்கான பேஷன் ஷோ...!!லண்டனில் நடைபெற்ற பிரபலங்களின் குழந்தைகளுக்கான பேஷன் ஷோ...!!