பாகிஸ்தானில் உலகின் மிகப்பெரிய ஓவியத்தை வரைந்து மாணவர்கள் சாதனை



பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த பள்ளி-கல்லூரி மாணவர்கள் உலகின் மிகப்பெரிய ஓவியத்தை வரைந்து சாதனையை நிகழ்த்தினார்கள்.
லாகூர் நகரில் உள்ள ஆக்கி அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமுார் 1,000 மாணவர்கள் கலந்து கொண்டு 7 மணி நேரத்தை செலவிட்டு 41,685 சதுரை அடி கொண்ட ஓவியத்தை தீட்டினார்கள்.
இந்த சாதனை பற்றி விழா குழுவினர் குறிப்பிடுகையில், பாகிஸ்தான் தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு மிகப்பெரிய ஓவியம் தீட்ட ஏற்பாடு செய்தோம் என தெரிவித்தார். அரங்கத்தில் ஆயிரக்கணக்கில் குழந்தைகள், பொதுமக்கள் திரண்டிருந்து இந்தக் காட்சியை கண்டு களித்தனர் என்று தெரிவித்துள்ளார்.


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: