பகத் சிங்கின் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி





சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதிய ஐந்து ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
இதுகுறித்து மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: பகத் சிங் நூற்றாண்டு விழாவையொட்டி, வெளியிடப்படவுள்ள ஐந்து ரூபாய் நாணயத்தின் ஒரு புறத்தில், பகத் சிங் உருவமும் மறுபுறத்தின் வலதுபுறத்தில் “ஷாஹித் பகத் சிங் நூற்றாண்டு விழா” என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும்.
உருவப் படத்தின் கீழே, 1907-2007 என்ற சர்வதேச எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த நாணயம், இந்திய நாணயச் சட்டம் 1906ன்படி தொடர்ந்து செல்லத்தக்கது என்று தெரிவித்துள்ளது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: