குளிக்கும் போது தவறாக பார்த்த முதியவரை தட்டிக் கேட்ட பெண் மீது துப்பாக்கிச்சூடு




கேரளாவில் பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட குற்றத்திற்காக முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் கும்பழை பகுதியை சேர்ந்தவரான சாம்சன் மனைவி மேழ்சி (வயது 33) தன் வீட்டு குளியலறையில் குளித்துக்கொண்டிக்கும் போது ஜோசப் (வயது 75) என்பவர் அடிக்கடி மறைந்திருந்து அவர் குளிப்பதை பார்த்து வந்தார்.
சம்பவ தினமான நேற்று மாலை வீட்டு வேலைகளை முடித்து விட்டு மேழ்சி குளியல் அறைக்கு சென்றார். இதை மறைந்து நின்ற கவனித்த முதியவர் ஜோசப்பை அவர் பார்த்து அவரை கண்டித்தார்.
மேலும் கணவர் சாம்சனிடமும் இதுபற்றி புகார் அளித்தார். உடனே அவர் முதியவர் ஜோசப்பை எச்சரித்தார்.
இந்த விவகாரத்தில் இவர்களுக்கு தகராறு ஏற்பட முதியவர் ஜோசப் தன்னிடம் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மேழ்சியை நோக்கி சுட்டார்.
இதில் அவருடைய கன்னத்தில் குண்டு பாய்ந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பழை அரசு  மருத்துவமனையில் மேல்சியை சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த  போலிஸார் ஜோசப்பை கைது செய்து அவரிடம் இருந்த கைத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: