ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் தேர்தலில் போட்டி


தாய்லாந்தைச் சேர்ந்த யொல்லாதா நொக் சுயான் யாட்(30) என்ற நபர் ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். இவர் பெண்ணாக மாறியவர்கள் சங்கத்தின் தலைவியாகவும் உள்ளார்.
தாய்லாந்தில் விரைவில் மாகாண பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளார். இவருக்கு பாலினம் மாறியிருப்பவர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது.
தான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஓரின சேர்க்கையாளர் மற்றும் பாலினம் மாற விரும்புவோருக்கு, அதற்கான அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து தருவதாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
இவ்வாறு பாலினம் மாறியவர் தாய்லாந்து மாகாண பிரதிநிதி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: