அமெரிக்காவில் மாணவர்களை அச்சுறுத்திய கரடி


அமெரிக்காவில் University of Colorado என்ற பல்கலைக்கழகத்தில் கரடி ஒன்று 15 அடி உயரத்தில் மரத்தின் மீது ஏறி அங்குள்ள மாணவர்களை அச்சுறுத்தியுள்ளது.
200 பவுண்ட் எடையுள்ள இந்த ஆண் கரடியை 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு வனத்துறை காவல் அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
மேலும் இக்கரடியை பிடிக்கும் பொழுது மாணவர்களுக்கும், அங்கிருக்கும் மற்ற நபர்களுக்கும் எந்த விதமான இடையூறும் இன்றி பாதுகாப்பான முறையில் அமைதியாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
வனத்துறை காவல் அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டு கூண்டுக்குள் அடைக்கப்பட்ட இக்கரடியை அங்குள்ள தைரியமான சில மாணவர்கள் அதனை தொட்டுப்பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: