கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த பாலைவன சொர்க்கம்


இயற்கை அதிசயங்கள் கொஞ்சி விளையாடும் இடங்களை சொர்க்கம் என கூறுவது உண்டு. ஆனால் பாலைவன சொர்க்கம் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
ஐக்கிய அரபு எமிரேட்டில் தான இந்த பாலைவன சொர்க்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு பல வண்ணங்களில் மலர்கள், பசுமை கொஞ்சும் புல்வெளி என பல வகையான பசுமைச் சோலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
உயரமான இடங்கில் 2965 கூடைகளில் கண்ணை கவரும் மலர்கள் தொங்குகின்றன. இதை பார்ப்பதற்கு தொங்கு தோட்டம் போலவே உள்ளது.
மலர்களால் பிரமிடுகள், ஒட்டகம், யானை ஆகியவையும் உருவாக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இங்கு பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் ஒளிரும் போது பார்வையாளர்களை வசீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
21 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தோட்டம் கின்னஸ் சாதனை புதத்கத்திலும் இடம்பிடித்துள்ளது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: