பள்ளிகளுக்கு விடுமுறை

திருவள்ளூர், டிச.29: தானே புயல் காரணமாக பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி அறிவித்துள்ளார்.

 வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தானே புயலால் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி அறிவித்துள்ளார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: