தொண்டர்களுக்கு ஜெயலலிதா எச்சரிக்கை

சென்னை: அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என முதல்வர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை வானரகத்தில் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் பேசிய முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, அ.தி.மு.க.,வின் தேசிய அளவிலான வெற்றிக்கு தொண்டர்கள் இப்போதிலிருந்தே தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு உண்டு என்றும், அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த பிரமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக அ.தி.மு.க., உருவெடுக்கும் என்று கூறிய ஜெயலலிதா, அடுத்து அமையவுள்ள மத்திய அரசில் அ.தி.மு.க., பங்கெடுக்கும் என்றும் உறுதிபட தெரிவித்தார். தொண்ரடர்களிடம் பதவியிலிருப்பவர்கள் தோழமையுடன் பழக வேண்டும். தலைமை மீது சந்தேகம் கொண்டு பேசுபவர்களுக்கும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வோருக்கும் மன்னிப்பே கிடையாது என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.
தினமலர் 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: