மின்கம்பி அறுந்து விழுந்து மாடுகள் சாவு

திருவள்ளூர், டிச.29: புயல் காரணமாக வீசிய பலத்த காற்றில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் திருவள்ளூர் அருகே 2 பசு மாடுகள், ஒரு கன்று ஆகியவை வியாழக்கிழமை உயிரிழந்தன.

 திருவள்ளூர் மாவட்டத்தில் தானே புயல் காரணமாக பரவலாக லேசான மழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. செவ்வாப்பேட்டையை அடுத்த அயத்தூர் சீனிவாசா நகரில் வியாழக்கிழமை பிற்பகலில் பலத்த காற்று வீசியது. இதில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது.

 இதில் அயத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டரெட்டி என்பவரது 2 பசுமாடுகள், 1 கன்று ஆகியவை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து கோதண்டரெட்டி கொடுத்த புகாரின் பேரில் செவ்வாப்பேட்டை போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: