கும்மிடிப்பூண்டி, டிச.29: தானே புயல் காரணமாக திசை மாறி இஸ்ரோ கட்டுப்பாட்டில் ஆந்திர எல்லையில் கரை சேர்ந்த தமிழக மீனவர்களை தமிழக போலீஸôர் மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளான பாட்டை குப்பம், நொச்சிக்குப்பம், பெத்தானியா குப்பம், வெங்கடேசபெருமாள் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 122 மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில் தானே புயல் காரணமாக திசை மாறி ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள இஸ்ரோவுக்குச் சொந்தமன ஸ்ரீஹரிக்கோட்டாவை அடுத்த புளியஞ்சேரிகுப்பம், ஜோனாபாளையம் ஆகிய தடை செய்யப்பட்ட பகுதிகளில் மீனவர்கள் 122 பேர் கரை சேர்ந்தனர். அப்போது அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து மீனவர்கள் ஆரம்பாக்கம் ஊராட்சித் தலைவர் ஆறுமுகத்துக்கு தகவல் கொடுத்ததை அடுத்து ஊராட்சித் தலைவர் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் வேணுகோபால், ஒன்றிய குழு தலைவர் குனம்மாள் கோபால் ஆகியோர் கூடூர் ஆர்டிஓ வீரபாண்டியனிடம் மீனவர்கள் தொடர்பாக பேசினர்.
பின்னர் போலீஸôர் மற்றும் அதிகாரிகள் 6 வேன்களில் ஆந்திர மாநிலம் சென்று 122 மீனவர்களையும் மீட்டு அழைத்து வந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளான பாட்டை குப்பம், நொச்சிக்குப்பம், பெத்தானியா குப்பம், வெங்கடேசபெருமாள் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 122 மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில் தானே புயல் காரணமாக திசை மாறி ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள இஸ்ரோவுக்குச் சொந்தமன ஸ்ரீஹரிக்கோட்டாவை அடுத்த புளியஞ்சேரிகுப்பம், ஜோனாபாளையம் ஆகிய தடை செய்யப்பட்ட பகுதிகளில் மீனவர்கள் 122 பேர் கரை சேர்ந்தனர். அப்போது அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து மீனவர்கள் ஆரம்பாக்கம் ஊராட்சித் தலைவர் ஆறுமுகத்துக்கு தகவல் கொடுத்ததை அடுத்து ஊராட்சித் தலைவர் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் வேணுகோபால், ஒன்றிய குழு தலைவர் குனம்மாள் கோபால் ஆகியோர் கூடூர் ஆர்டிஓ வீரபாண்டியனிடம் மீனவர்கள் தொடர்பாக பேசினர்.
பின்னர் போலீஸôர் மற்றும் அதிகாரிகள் 6 வேன்களில் ஆந்திர மாநிலம் சென்று 122 மீனவர்களையும் மீட்டு அழைத்து வந்தனர்.