ஜெயலலிதாவை வீழ்த்த விஜயகாந்த்துடன் கைகோர்க்க சசி தரப்பு முடிவு?

 ஜெயலலலிதாவால் விரட்டப்பட்டுள்ள சசிகலா குழுவினர், ஜெயலலிதாவை வீழ்த்த அவரது இன்னொரு எதிரியான விஜயகாந்த்துடன் கை கோர்க்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

அதிமுகவிலிருந்தும், ஜெயலலிதாவின் மதிப்பு வட்டத்திலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டுள்ள சசிகலா தரப்பு இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்தடுத்த விசாரணையின்போது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அரசியல் வட்டாரத்தில் புதிய தகவல் ஒன்று கிசுகிசுக்கப்படுகிறது. சசிகலா தரப்பு, ஜெயலலிதாவை வீழ்த்த விஜயகாந்த்துடன் அணி சேரலாம் என்பதுதான் அந்த கிசுகிசு.

அதிமுக கூட்டணிக்கு விஜயகாந்த்தைக் கூட்டி வந்தவர்களில் முக்கியமான பங்கு சசிகலா தரப்புக்கும் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். பத்திரிக்கையாளர் சோ உள்ளிட்டோர்தான் இந்த கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டனர் என்றாலும் கூட தொகுதிப் பங்கீடு, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது உள்ளிட்ட பல விஷயங்களை சசிகலா தரப்புதான் முதலில் விஜயகாந்த் தரப்புடன் பேசியது.

எனவே அந்த நட்பின் அடிப்பையில் வரும் காலத்தில் விஜயகாந்த்துடன் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சசிகலா தரப்பு இணைந்து செயல்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேசமயம், நடராஜன், திமுகவுடன் தனக்குள்ள ரகசிய உறவைப் பயன்படுத்தி அந்தக் கட்சிக்கும் உதவிக் கரம் நீட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஜெயலலிதாவுக்கு எதிராக சிதறிக் கிடக்கும் பல்வேறு சக்திகளைத் திரட்டவும் அவர் முயலலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த தங்களை கூண்டோடு ஜெயலலிதா நீக்கியுள்ளதன் மூலம் முற்பட்ட வகுப்புக்குச் சாதகமாக ஜெயலலிதா நடப்பதாக அந்த சமுதாயத்தினர் மத்தியில் குறிப்பாக காவிரி டெல்டாப் பகுதி மாவட்டங்களில் உள்ள தங்களது சமுதாயத்தினர் மத்தியில் கருத்தைரப் பரப்ப அவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டோருடன் கை கோர்க்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இதனால் நடராஜனின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆனால் ஜாதியை வைத்து நடராஜன் தரப்பு பிரசாரத்தில் இறங்கினால் அதை ஜெயலலிதா எளிதாக சமாளித்து விடுவார் என்று ஜெயலலிதா விசுவாசிகள் கூறுகிறார்கள். காரணம், முக்குலத்தோருக்கு அரசியல்ரீதியாக பெரும் அங்கீகாரம் கொடுத்து பல உயர் பதவிகளையும், அமைச்சர் பதவிகளையும் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்., அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாதான் என்பது அந்த சமுதாயத்தினருக்கு நன்கு தெரியும். மேலும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் பதவியிலும் ஜெயலலிதா அமர்த்தியதை அச்சமுதாயத்தினர் இன்னும் மறக்கவில்லை. எனவே ஜாதி ரீதியாக நடராஜன் தரப்பு கிளம்பினால் அது தோல்வியிலேயே முடியும் என்கிறார்கள் அவர்கள்.

தற்போதைய நிலையில் சசிகலா தரப்பு, ஜெயலலிதாவுக்கு எதிராக ஏவப் போகும் அஸ்திரம் என்ன என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் காத்திருக்கிறது.
thedipaar.com
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: