சென்னை: தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இதில் உடனடி நிவாரணம், அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தப்படும். சாலைகளில் சாய்ந்து கிடக்கும் மரங்களை உடனடியாக அகற்றவும், சேதமடைந்துள்ள மின்கம்பங்களை சரி செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புயல் இழப்பு சேத மதிப்பீடுகளை உடனடியாக கணக்கீடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சேத விபர அறிக்கைகளை விரைந்து அளிக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தினமலர்
தினமலர்