பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்வு?

 புதுடில்லி: பெட்ரோல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரை உயர்த்த, எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு, நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு அதிகரித்துள்ளது. இழப்பை குறைக்கும் வகையில், உள்நாட்டில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு, குறைந்தது ரூ.2.10லிருந்து, அதிகபட்சமாக ரூ.2.13 வரை அதிகரிக்க, எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றபடி, ஒவ்வொரு மாதமும், முதல் தேதியும், 15ம் தேதியும், பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கும் உரிமை, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு, இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் விலை உயர்வை அறிவிப்பது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இருக்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனவே, விலை உயர்வு அறிவிப்பை வெளியிடுவதற்கு முன், அரசியல் ரீதியான ஒப்புதலையும் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: