அமெரிக்காவில் பயங்கர சூறாவளி: 5 பேர் பலி


அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் ஏற்பட்ட பயங்கர சூறாவளி புயலில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று முன்தினம் கன்சாஸ், அயோவா, நெப்ரெஸ்கா, ஒக்லஹாமா உட்பட பல்வேறு பகுதிகளை சூறாவளி புயல் தாக்கியது.
இதனால் இந்த பகுதிகளில், மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன, பல வீடுகள் சேதமடைந்தன. முன்னெச்சரிக்கையாக மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஒக்லஹாமாவின் உட்வார்டு பகுதியில் புயலில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலியாயினர். அயோவாவின் க்ரெஸ்டன் பகுதியில் ஒரு மருத்துவமனை இந்த புயலில் சேதமடைந்தது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: