| தலைநகர் புதுடெல்லியில் நேற்று அவருக்கு அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் மன்மோகன் சிங், கலீபா அல்தானி இருவரும் இந்தியா, கத்தார் இடையே இருதரப்பு உறவு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையின் மூலம் இரு நாடுகளுக்கிடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரஷ்யா, ஈரானுக்கு அடுத்து உலகின் 3வது மிகப் பெரிய இயற்கை எரிவாயு வளம் கொண்ட கத்தார், ஆண்டுக்கு 7.7 கோடி டன் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி திறன் கொண்டுள்ளது. எனவே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் ஒப்பந்தத்தில் பெட்ரோலிய அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி, கத்தார் எரிசக்தித் துறை அமைச்சர் முகமது பின் சலே அல்சதா ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்தியாவிற்கான ஏற்றுமதி ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. ஏற்கனவே கத்தாரிடம் ஆண்டுக்கு 75 லட்சம் டன் எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. மேலும் இரு நாடுகள் இடையே கல்வி, கலாசாரம், சுற்றுலா மேம்பாடு ஆகிய பிரிவுகளில் அடுத்த 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நிதி துறையில் தகவல் பரிமாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் ரிசர்வ் வங்கியும் கத்தார் மைய வங்கியும் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளன. 6வது ஒப்பந்தமாக சட்ட விவகாரங்களில் அனுபவம், தகவல் மற்றும் நிபுணத்துவத்தை பரிமாறிக் கொள்ள இந்தியாவும், கத்தாரும் ஒப்புக் கொண்டுள்ளன. ![]() |
இயற்கை எரிவாயு உட்பட இந்தியா, கத்தார் இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail
