பின்லேடனின் மனைவி, குழந்தைகள்! வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட வீடியோ வெளியானதால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)



ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோபதாத் நகரில் கொல்லப்பட்ட பிறகு அவரது மனைவிகள், குழந்தைகள், பேரப்பிள்ளைகள் ஆகியோர் கண்காணாத இடத்தில் பாகிஸ்தானின் புலனாய்வுப் பிரிவினரால் சிறை வைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் பாகிஸ்தானில் உள்ள பிரத்தியேக இடம் ஒன்றில் வீட்டுக் காவலில் நல்ல நிலையில் சிறையில் வைக்கப்பட்டுள்ள தகவல் தற்போது
வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமபாத்தில் உள்ள பிரத்தியேக வீடு ஒன்றில் ஒசாமா மனைவி, குழந்தைகள், பேரப்பிள்ளைகள் சிறை வைக்கப்பட்டுள்ள பரபரப்புக் காட்சியை Al Arabiya television network என்ற தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.குறித்த வீடியோக் காட்சியில் காட்டப்படுகின்ற முக்கிய செய்திகள் வருமாறு,
அந்த வீடியோவில் காட்டப்படுகின்ற வீட்டில் குழந்தைகள் கரடிப் பொம்மை மற்றும் கிரிக்கட்  பேட் ஆகியவற்றுடன் விளையாடுகின்றன. கைது செய்யப்பட்ட ஒசாமா பின்லேடனின் மூன்று மனைவிகளும் குரான் வாசித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.  
அவர்கள் இருக்கின்ற வீட்டுப் பகுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.
கடுமையான ஆயுதங்களுடன் பாகிஸ்தானின் இராணுவத்தினரும்  போலிஸாரும் வீட்டின் முன் காணப்படுகின்றார்கள். 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: