வானத்தில் பறந்த சுறாமீன்: விமானி அதிர்ச்சி (வீடியோ )



நியூசிலாந்து நாட்டின் விமானி 7 அயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். அப்போது வானத்தில் 5 அடி நீளமுள்ள சுறாமீன் மின்னிக் கொண்டு பறப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே கிறிஸ்ட்சர்ச் சர்வதேச விமான நியைத்துடன் தொடர்பு கொண்டு விமானத்தை தரை இறக்கினார். வானத்தில் மிதந்து வந்த சுறாமீன் பற்றிய தகவலை தெரிவித்தார்.
ஆனால் விமான நிலைய அதிகாரிகளோ அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவரை சமாதானம் செய்தனர். காரணம் வானத்தில் மிதந்தது உண்மையான சுறாமீன் அல்ல. அது ரிமோட் மூலம் காற்றில் பறக்க விடப்பட்ட பொம்மை ஆகும்.
இவைகளால் விமானத்துக்கு பெரிய அளவில் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: