ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை ஹெலிகாப்டர் நொறுங்கியது; அமெரிக்க ஆக்கிரமிப்பு படை வீரர்கள் 6 பலி !


ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை ஹெலிகாப்டர் நொறுங்கியது; அமெரிக்க ஆக்கிரமிப்பு படை வீரர்கள் 6 பலி !

ஆப்கானிஸ்தானில் 'நேட்டோ' படை ஹெலிகாப்டர் நொறுங்கியது; 6 வீரர்கள் பலிஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படை  தலைமையிலான நேட்டோ ராணுவம் (பன்னாட்டு படை) முகாமிட்டு அந்நாட்டு போராளிகளுடன்  போரிட்டு வருகிறது. இந்த நிலையில் தெற்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வானில் பறந்து சென்று கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் திடீரென தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 அமெரிக்க ஆக்கிரமிப்பு படை   வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் எப்படி நடந்தது என தெரியவில்லை. ஏனெனில் விபத்து நடந்தபோது தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதிகளில்  போராளிகள்   நடமாட்டம் எதுவும் இல்லை. எனவே, ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இல்லை. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதில் 22 நேவிசீல் கமாண்டர்கள் உள்பட 30 வீரர்கள் பலியானார்கள். 
asiananban.blogspot.com
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: