மின்-கழிப்பறைகள் (e-toilets) திட்டம்: கேரளாவில் அறிமுகம் !

 மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில்  தற்போது செயலில் இருக்கும் மின் கழிப்பறைகள் திட்டத்தினை கேரள மாநிலத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2012 மார்ச் மாத இறுதிக்குள் கேரள மாநிலத்தில் 450 மின்-கழிப்பறைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்-கழிப்பறையில், தானே தூய்மைப்படுத்திக் கொள்ளும் அமைப்பு, கிருமி நீக்கிகள், தானியங்கி கதவுகள், சக்திகூடிய நீர் வெளியேற்றம் இவற்றோடு, இவை எல்லாவற்றையும் குறுஞ்செய்தி
மூலம்  எச்சரிக்கை தகவல் அனுப்பி இப்பணிகளை கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அறை, கழிப்பறை தொட்டியில் உள்ள நீர் அளவு கண்காணிப்பு அமைப்பு, ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதை நீக்க பயோ-காஸ் அமைப்பு அனைத்தும் கொண்டதாக இருக்கும்

இந்த வகையில், இந்தியாவில் முதல் மாநிலமாக, முழுவதும் தானியங்கி பொதுக் கழிப்பிடங்கள் கட்டுமானம் கேரளாவில் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள ஈராம் குழுமத்தைச் சேர்ந்த ஈராம் சையண்டிபிக் சொலுஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
asiananban
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: