மார்ச் மாதம் வருகின்றது?


இன்று வரும் நாளை வரும் எனப் பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்ப சாதனமொன்று எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகுமென பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
அது வேறு எதுவும் அல்ல. அப்பிளின் ஐ பேட் 3.

மார்ச் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வொன்றில் வைத்தே இது அறிமுகப்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
அப்பிளின் ஐ பேட் 2 வும் இதுபோன்றே கடந்த வருடம் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.ஐ பேட் 3 ஆனது அதன் ஐ பேட் 2வின் தோற்றத்தினை ஒத்ததாகவே காணப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் முன்னையதைவிட தெளிவான திரை, ஐ போன் 4 எஸ் இல் அறிமுகப்படுத்தப்பட்ட ' Siri' எனப்படும் குரல் கட்டளைகளுக்கு ஏற்ப செயற்படும் வசதியினையும் இது உள்ளடக்கியிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது,
மேலும் A6 புரசசரை ஐ பேட் 3 கொண்டிருப்பதனால் அதில் இயங்கும் வகையில் அப்ளிகேசன்களை அப்பிள் இயைபாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகின்றது.
இதைவிட மேலும் பல தொழில்நுட்ப வசதிகளையும் இது உள்ளடக்கியிருக்குமெனவும் நம்பப்படுகின்றது.
இதன் இறுதிக்கட்ட தயாரிப்புப் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருவதாகத் தகவல் கசிந்துள்ளது.
எது எவ்வாறாயினும் மார்ச் மாதம் அப்பிள் விரும்பிகளுக்குக் கொண்டாட்டாம் தான்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: