இளம்பெண்ணை புகைவண்டியின் ஓடுபாதையில் தள்ளிவிட்ட கொடூர மனிதன்


முன் பின் தெரியாத மனிதர் ஒருவர் 23 வயதான இளம் பெண்ணை புகையிரத வண்டியின் ஓடுபாதையின் முன்னே தள்ளி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது இலண்டனிலுள்ள லைசெஸ்ரர் சதுர்க்கத்தில் காணப்படும் புகைவண்டி நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
எதிரெதிராக வந்துகொண்டிருந்த இருவரும் ஒருவரை ஒருவர் விலகிச் செல்லும் சந்தர்ப்பத்தில் புகையிரத நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதம் ஒன்றின் முன்னே சற்றும் எதிர்பாராத விதமாக தள்ளிவிட்டுள்ளார்.
அங்கு கூடியிருந்தவர்கள் குறித்த பெண்ணை காப்பாற்றியதுடன் அந்த மனிதரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: