அதிரையில் மூன்று வாலிபர்கள் கைது! ஒருவர் தலைமறைவு !



 
  கடந்த 26.2.12அன்று SDPI யின் சார்பாக திருவாரூரில் அகல ரயில் பாதை விசயமாக மறியல்
 நடைபெற்றது இதில் கலந்து கொள்ள சென்ற ஒருவரை சகோ.(தா மு மு க).தையுப் அவர்கள் தடுத்து
 நிறுத்தினார் என்ற காரணத்தால் சகோ.தையுப் அவர்களுக்கும் அதிரை SDPI இல்யாஸ் அவர்களுக்கும்
சிறிது கைகலப்பு ஏற்ப்பட்டது இது தொடர்பாக இரு தரப்பிலும் அதிரை காவல்துறையிடம் புகார் மனு 
அளிக்கப்பட்டது. 
    மறுநாள்(27/2/12) (தா மு மு க). தையுப் அவர்கள் தக்வா பள்ளி அருகில் இருக்கும் மார்க்கெட்டில்
 இருந்து நடுத்தெரு வழியாக பைக்கில் வந்து கொண்டு இருக்கும்போது முகமது,ரிஸ்வான்,நூருல்லாஹ்,
முகமது இலியாஸ், முகத்தை முடிக்கொண்டு பைக்கில் வந்து இரும்பு பைப்பால்  கொலைவெறி
 தாக்குதல் நடதினார்கள்  என்று  கூறபடுகிறது.
 இதனையடுத்து நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில்  
அதிரை காவல்துறை ஆய்வாளர் செங்கமலைக் கண்ணன் அவர்கள் முகமது,ரிஸ்வான்,நூருல்லாஹ்
 முவரையும் கைது செய்துள்ளார், முகமது இலியாஸ்,அவர்களை வலை வீசி தேடிவருகிறார்கள்.

அதிரை ப்ளஸ்க்காக 
அதிரை அமானுல்லாஹ்  
thanks to adiraiplus.com
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: