நிபுணர் குழு பேச்சுவார்த்தை தோல்வி: கூடங்குளத்தில் பதட்டம்- போலீஸ் குவிப்பு !


நிபுணர் குழு பேச்சுவார்த்தை தோல்வி: கூடங்குளத்தில் பதட்டம்- போலீஸ் குவிப்புகூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு நிபுணர் குழுவினர் , அணுமின்நிலைய எதிர்ப்பாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து அணு உலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தை தோல்வியால் கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் இன்று பதட்டம் ஏற்பட்டது. அணு உலையை முற்றுகையிட போவதாக கிராம மக்கள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் இன்று காலை கூடங்குளம் சென்றார்.   அவருடன் நெல்லை சரக டி.ஐ.ஜி.வரதராஜ், எஸ்.பி.விஜயேந்திர பிதரி உள்ளிட்ட அதிகாரிகளும் கூடங்குளத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
அணுஉலையை முற்றுகையிட வருவோரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: