இந்தச் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,
சீனாவின் தேசிய நெடுஞ்சாலையின் பாலம் ஒன்றிலிருந்து தனது கைக் குழந்தையுடன் ஒரு பெண் குதிக்க முயல்கின்றார்.
அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வரும் போலிஸ்காரர் இதனைக் காண்கின்றார்.
உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அதிரடியாக பெண்ணை பக்குவமாக மீட்கிறார் அவர்.
Qiao Jinhai என்ற இந்த போலிஸ்காரர் மிகுந்த சிரமத்தின் மத்தியில் பெண்ணையும் குழந்தையையும் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போலிஸ்காரரின் அதிரடியான செயலை அங்குள்ள பொதுமக்கள் மிகவும் பாராட்டினார்கள்.
இந்தச் சம்பவம் சீனாவின் பீஜிங் பகுதியில் நடந்துள்ளது.