ரூ.2 லட்சம் வருமானம் வரை வரி இல்லை: ரூ.10 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30% வரி!

  டெல்லி: இன்று 2012-13ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.

இதில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 1.8 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது நாம் எவ்வளவு ஊதியம் வாங்கினாலும் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் வரை வரி இல்லை.

ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு ஊதியத்துக்கு 10% வருமான வரி விதிக்கப்படும்.

ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 20% வரி விதிக்கப்படும்.

ரூ. 10 லட்சத்துக்கு மேலான ஆண்டு வருமானத்துக்கு 30% வருமான வரி விதிக்கப்படும்.

இதுவரை ரூ.1.8 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி இல்லை. ரூ. 1.8 லட்சம் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீதமும், ரூ. 5 முதல் ரூ. 8 லட்சம் வரையிலான பட்ஜெட்டுக்கு 20 சதவீதமும், ரூ. 8 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேரடி வரிகள் சட்ட மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக் குழு, வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தும்படி சிபாரிசு செய்திருந்தது. ஆனால், நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி பிரணாப் முகர்ஜி, அதை ஏற்காமல் விட்டுவிட்டார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: