போக்குவரத்து போலீசை தாக்கிய உறவினரை கைது செய்ய மம்தாபானர்ஜி உத்தரவு !



 மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தாபானர்ஜியின் உறவினர் ஆகாஷ்பானர்ஜி. இவர் கொல்கத்தாவில் உள்ள கிட்டர்போர் பகுதியில் 2 நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் போக்குவரத்து விதியை மீறியதால் அங்கு நின்று கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் காரை நிறுத்துமாறு கூறினார்.  இதனால் ஆவேசம் அடைந்த ஆகாஷ்பானர்ஜி காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். பின்னர் நான் யார் தெரியுமா? மம்தாபானர்ஜியின் நெருங்கிய உறவினர் என்று கூறியபடி போலீஸ்காரரை கடுமையாகத் தாக்கினார். 

இதனால் போலீஸ்காரர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் ஆகாஷ் பானர்ஜி தன்னை தாக்கியது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அடுத்த நிமிடமே உயர் அதிகாரிகள் முதல்வர் மம்தாபானர்ஜியிடம், ஆகாஷ் பானர்ஜி போலீஸ் காரரை தாக்கியது பற்றி கூறினார். 

இதை கேட்டதும் சற்று அதிர்ச்சி அடைந்த மம்தா பானர்ஜி, சட்டம்- ஒழுங்கு அனைவருக்கும் பொதுவானது. ஆகாஷ் பானர்ஜியை உடனே கைது செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். 

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று ஆகாஷ்பானர்ஜி உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: