செருப்படி வாங்கியும் திருந்தாத இந்து முன்னனியினர்


சென்னை: சமீபத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்ற கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று கூட பாராமால் தாக்கி பின்னர் பெண்களிடம் செருப்படி வாங்கி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கின்றனர் சில இந்து முன்னனி நிர்வாகிகள்.





தற்போது இது தொடர்பாக தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருக்கும் இந்து முன்னனி கூடன்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களை கலவரக்காரர்கள் என்றும் தங்களை அப்பாவிகள் என்று கூறியுள்ளது. மத்திய மாநில குழுவிடம் ஆதரவு கடிதத்தை கொடுக்க வந்த‌ இந்து முன்னனியினரிடம் வேண்டுமென்றே அணு உலை எதிர்ப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினார்கள் என்றும் கூறுகிறது. காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டு இந்து முன்னனியினரை கைது செய்துவிட்டதாகவும், உடனே முதலைமைச்சர் இதில் தலையிட்டு இதனை தீர்த்துவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

செருப்படி பட்டும் திருந்தாத இந்து முன்னனியினர் கீழ் கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

1. அணு உலையை உருவாக்குவதற்கு இந்து முன்னனியும் ஆதரவு அளிக்கிறது என்ற செய்தியை ஏற்கனவே வெளியிட்டிருந்த போதும் பேச்சு வார்த்தை நடக்க இருந்த நாளில் அதுவும் அதே இடத்தில் சென்று ஆதரவு கடிதம் அளிப்பதற்கான காரணம் என்ன?

2. பேச்சுவார்த்தைக்கு வந்த அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு நீங்கள் இந்து முன்னனி இயக்கத்தினர்கள் என்றும் அவர்களுக்கு எதிராக ஆதரவு அளிக்க வந்தவர்கள் என்பதும் அவர்களுக்கு தெரியாத நிலையில் எப்படி அவர்களாகவே வந்து உங்களிடம் வாக்குவாதம் செய்தார்கள்?

3. அணு உலையால் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று நிரூபித்தால் கோடி ரூபாய் பரிசு என்று மக்கள் ஜனனாயகக் கட்சி அறிவித்திருந்ததே! அப்படியானால் அணு உலையை ஆதரிக்கும் இந்து முன்னனியினர் ஏன் அதனை நிரூபிக்க முன் வரவில்லை?

4. அணு உலையை ஏற்படுத்தாவிட்டால் தமிழகமே இருளில் மூழ்கி விடும் அபாயம் இருப்பதாக கூறும் இந்து முன்னனியினரே அணு உலை மூலம் சொற்ப சதவிகிதமே மின்சாரம் தயாரிக்க இயலும் என்றும் முழுக்க முழுக்க மனித இனத்தையே அழிக்கக்கூடிய வெடி பொருட்களைத்தான் தயாரிக்க முடியும் என வல்லுனர்கள் கூறியது தெரியாதோ?

5. காங்கிரஸ் அரசாங்கம் எந்த ஒரு நல்ல திட்டத்தை செயல்படுத்த நினைத்தாலும் அதற்கு முதல் முட்டுகட்டையாய் இருப்பது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னனி போன்றவர்கள் தான். அப்படி இருக்க அணு உலை விசயத்தில் மட்டும் காங்கிரஸ் அரசாங்கத்திற்காக பரிந்து பேசுவது ஏன்?

6. அணு உலை எதிர்ப்பாளர்கள் இதுவரை எந்த ஒரு வன்முறை சம்பவத்திலும் ஈடுபட்டதில்லை. மாறாக ஜனநாயக முறையிலும் அமைதியான முறையிலும் உண்ணாவிரதம் இருந்து வரும் அவர்களை கலவரக்காரர்கள் என்றும் வன்முறையை மட்டுமே நம்பிக்கொண்டு தேசத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் உங்களைப் போன்றவர்களை உத்தமர்களாக காட்டிக்கொள்ள நினைப்பது ஏன்?

7. இந்துக்களுக்காக போராட, வாதாட, பரிந்து பேசவே இந்து முன்னனி இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக விவரிக்கும் இந்து முன்னனியினரே உங்களது பார்வையில் அணு உலை எதிர்ப்பாளர்கல் இந்துக்கள் இல்லையா?  இதே போராட்டத்தை பிராமணர்கள் செய்திருந்தால் ஆதரித்திருப்பீர்கள்தானே?
thanks to. adiraithunder.blogspot.in
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: