ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில் ஈரானின் தென்பகுதியில் நேற்று முன்தினம் அந்நாட்டின் இராணுவமான ஈரான் புரட்சிப் படை இரண்டு நாள் போர் ஒத்திகையை தொடங்கியது. இந்த ஒத்திகை சிறிய அளவில் தான் நடக்கும் என அந்நாட்டு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஈரான் புரட்சிப் படையின் துணை தளபதி உசேன் சலாமி நேற்று விடுத்த அறிக்கையில், எந்த நாடாவது ஈரான் மீது தாக்குதல் நடத்த எதிரி நாடுகளுக்கு இடம் கொடுக்குமானால் அந்நாட்டின் மீது ஈரான் கடும் தாக்குதல் நடத்தும் என எச்சரித்தார். |
மீண்டும் அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail