13 வயது சிறுவனுக்கு காவலிருக்கும் 15 அடி மலைப்பாம்பு

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் சீனாவிலுள்ள டோங்குயன் என்ற ஊரில் ஒருவர் தன்னுடைய 13 வயது மகன் அஸ்ஹி லியூவை பாதுகாக்க மலைப்பாம்பை வளர்த்து வருகிறார்.
இந்த பாம்பு உருவத்தில் சிறிது என நினைத்துவிடாதீர்கள். அது 15 அடி நீளம் கொண்ட ராட்சத பாம்பு ஆகும். சிறுவனின் பெற்றோர் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியே செல்ல வேண்டியிருந்தது.
அவனை வீட்டில் தனியாக விட்டு செல்ல முடியாததால் அவன் 6 வயதாக இருக்கும் போது தந்தை மலைப்பாம்பு முட்டையை வாங்கி வந்து பொறிக்க செய்தார். அது குட்டி பருவத்தில் இருந்தே சிறுவன் அதோடு நெருங்கி பழகி நண்பனாகிவிட்டான்.
தற்போது சிறுவனை பாதுகாக்கும் செவிலித்தாய் போல் இந்த மலைப்பாம்பு ஆகிவிட்டது. பெற்றோர் வெளியே சென்றதும் அவன் பாம்பின் அருகில் தலையணையை போட்டு படுத்துக் கொள்வான். ஒரே அறையில் தங்கி விளையாடி மகிழ்கிறார்கள்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: