முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இன்று துவங்கியது !

முஸ்லிம்களின் புனித மாதமான ரம்சான் மாதம் இன்று துவங்குகிறதுஇஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான்  மாதம் ஞாயிற்றுக்கிழமை (நாளை) துவங்கும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரமலான்  மாதம் இன்று துவங்குவதாக பதேபுர் மசூதியின் இமாம் மவுலான முப்தி முகரம் முகமது நேற்று நள்ளிரவு அறிவித்தார்.இதுபற்றி பேசிய முகரம், 'வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால், பிறையைக் காண இயலவில்லை. எனவேதான் ஞாயிற்றுக்கிழமை ரமலான் துவங்கும் 
என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் ஸ்ரீநகர், ஐதராபாத் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலுள்ள மவுலானாக்களை நாங்கள் தொடர்பு கொண்டோம். அந்தப் பகுதிகளில் பிறையைக் கண்டதாக அப்பகுதி மவுலானாக்கள் கூறினர். இதனால் ரமலான் மாதம் இன்று துவங்கும் என அறிவிக்கிறோம்’ எனக் கூறினார்.
இது போல மலேசியா சிங்கப்பூர் இந்தோனேசியா புருனை போன்ற ஆசிய நாடுகளில் சனி கிழமை ரமலான் மாதம் தொடங்கியது. 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: