அதிகமாகி வரும் பெண் கைதிகள்: கவலையில் ஆப்கனிஸ்தான் - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

காபூல்: கட்டாயத் திருமணம், கற்பழிப்பு போன்றவற்றினால் வீட்டைவிட்டு ஓடிப்போவது போன்ற குற்றங்களினால் தற்போது 600க்கும் மேற்பட்ட பெண்கள் ஆப்கன் சிறையில் உள்ளதாக மனித உரிமைக் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

தலிபான்களின் ஆட்சி கவிழ்ந்தபின் கடந்த 12 வருடங்களில் இந்த வருடம் அதிகப்படியான எண்ணிக்கையில், அதாவது கிட்டத்தட்ட 600 பெண்களும், சிறுமிகளும் சிறையில் உள்ளனராம். 

இதில் பெரும்பான்மையான பெண்கள் கட்டாயத் திருமணம், கற்பழிப்பு மற்றும் வீட்டைவிட்டு ஓடிப்போவது போன்ற குற்றங்களினால் சிறையில் உள்ளனராம். இது கடந்த 18 மாதங்களில் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் அதற்கு உதவி புரியும் நாடுகளின் அரசியல் தோல்வியே இதற்கு முழு காரணம் என ஆசியக் கிளையின் துணை இயக்குனர் பெலிம் கினே குற்றம் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, நேட்டோ படைகள் அடுத்த வருடம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும்போது தங்களுடைய தங்களுடைய கல்வி மற்றும் வேலை குறித்த உரிமைகள் மீண்டும் பறிக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. 

மேலும் அதிபர் ஹமீத் கர்சாய் பெண்களின் பாதுகாப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால், இதனை மறுக்கிறது ஆப்கன் அரசு. 

இது குறித்து கருத்து தெரிவித்த ஆராய்ச்சியாளர் ஹீதர் பார் , ‘பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் அதாவது கட்டாயத் திருமணம், சிறுவயதுத் திருமணம், கற்பழிப்பு, பெண்களை துன்புறுத்தல் போன்றவற்றிற்கு எதிராக 2009ல் அதிபர் கொண்டுவந்த தீர்மானத்தினை உறுதிப்படுத்த, தற்போதைய அரசு தவறிவிட்டது. இந்த சட்டத்தினை அவர்கள் சரிசெய்யாவிட்டால், எதிர்காலத்தில் அதன் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: