ரியாத்: சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடபட்டனர்.
கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, ஏமனை சேர்ந்த 5 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது சவுதி அரேபிய அரசு. விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டு கோர்ட்டில் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் அனைவரும் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடபட்டனர். இவர்களையும் சேர்த்து இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 46 பேர் சவுதி அரேபியாவில் தூக்கிலிடபட்டுள்ளனர்..