சென்னை சேப்பாக்கம் கேலரிகளுக்கு சீல்- சுப்ரீம் கோர்ட்டில் கிரிக்கெட் சங்கம் முறையீடு!

Chepauk Stands Sealed Yet Again சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு சென்னை மாநகராட்சி அதிரடியாக சீல் வைத்தது. இந்த சீல் வைப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் சங்கம் மேல்முறையீடு செய்திருக்கிறது. 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 3 கேலரிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 3 கேலரிகளையும் நிரந்தரமாக பயன்படுத்தலாம் என உத்தரவிட்டிருந்தது. 

இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், சேப்பாக்கம் மைதானத்தின் 3 புதிய கேலரிகளையும் பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது. இதைத் தொடர்ந்து 3 கேலரிகளுக்கும் சென்னை மாநகராட்சி சீல் வைத்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் சங்கம் மேல்முறையீடு செய்திருக்கிறது. 

நாளை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: