புற்றுநோயினால் இழந்த முகத்தை மீண்டும் பெற்ற நபர்


புற்றுநோயினால் இழந்த முகத்தை மீண்டும் பெற்ற நபர்புற்றுநோய் காரணமாக முகத்தின் இடது பகுதியை இழந்த நபரொருவரின் முகம் மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த எரிக் மோகர்(60) என்ற நபர் புற்றுநோய் காரணமாக அறுவைசிகிச்சையின் போது அவர் தனது முகத்தின் இடது பக்கத்தை இழக்க நேரிட்டது.
இதனால் அவர் தனது இடது கண்ணையும் பறிகொடுக்க நேரிட்டது. இந்நிலையில் சுமார் 4 வருடங்களுக்கு பின்பு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவைசிகிச்சையடுத்து எரிக் தனது முகத்தினை மீண்டும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது  
இதற்கு முன்னர் சுமார் 8முறை  அறுவைசிகிச்சை  செய்யப்பட்டது அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. தற்போது அவரது சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதுடன் விரைவில் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோன்றவுள்ளார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: