உயிருடன் இருக்கும் போதே தனக்கு மரணச் சடங்கு நடத்திய மாணவி


உயிருடன் இருக்கும் போதே தனக்கு மரணச் சடங்கு நடத்திய மாணவிசீனாவைச் சேர்ந்த மாண­வி­யொ­ருவர் தான் உயி­ருடன் இருக்­கும்­போதே தனக்­கான மர­ணச்­சடங்கை நடத்­தி­யுள்ளார். 22 வய­தான ஸெங் ஜியா எனும் இம்­மா­ணவி உயி­ருடன் இருக்­கும்­போதே தனது மரணச்­ச­டங்கு நடை­பெ­று­வதை அனு­ப­விக்க விரும்­பி­ய­தாக கூறி­யுள்ளார்.
ஹுபே மாகா­ணத்தின் வூஹான் நகரைச் சேர்ந்த இம்­மா­ணவி சவப்­பெட்­டி­யொன்றை வாங்கி அதில் படுத்­துக்­கொண்டார். தனது உட­லா­னது சடலம் போல் காட்­சி­ய­ளிப்­ப­தற்­காக மேக்அப் கலை­ஞர்கள் குழு­வொன்றின் மூலம் உடலை சடலம் போன்று மாற்­றிக்­கொண்டார். முழு­மை­யான இறு­திச்­ச­டங்கு நிகழ்­வுகள் நடை­பெ­று­வ­தற்­கான ஏற்­பா­டு­களை அவர் செய்­தி­ருந்தார்.
இந்த முட்­டாள்­த­ன­மான போலி மர­ணச்­ச­டங்கு நிகழ்வில் ஸெங் ஜியாவின் குடும்­பத்­தினரும், நண்­பர்­களும் கலந்­து­கொண்­டனர்.  பின் சவப்­பெட்­டி­யி­லி­ருந்து எழுந்து அங்கிருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஸெங் ஜியா, அவ்விடத்திலிருந்து நடந்து சென்றார்.





Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: