கருணாநிதி பிறந்தநாள்: சென்னை செல்ல அனுமதி கோரி சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி மனு

 Kanimozhi Files Petition Seeking Permission Chennai  டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி சென்னை செல்ல அனுமதி கோரி அக் கட்சியின் எம்பி கனிமொழி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி, அந்த வழக்கு விசாரணைக்காக டெல்லியில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருடைய தந்தை கருணாநிதியின் பிறந்தநாள் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை செல்ல அனுமதி கோரி, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

டெல்லியில் கனிமொழி-ராசாவுடன் துரைமுருகன் சந்திப்பு:

முன்னதாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவைத் தமிழக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

ராசாவின் வீட்டில் சுமார் மூன்று மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையான ராசா, நீதிமன்ற அனுமதியின்றி தமிழகத்துக்குச் செல்லக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது. இதையடுத்து அவரை தமிழகத்தில் இருந்து செல்லும் நூற்றுக்கணக்கான திமுகவினர் சந்தித்து வருகின்றனர்.

இந் நிலையில் அவரை துரைமுருகன் சந்தித்துப் பேசியுள்ளார். ராசா தமிழகத்துக்கு வர முடியாது என்பதால், அவரிடம் கட்சி விவகாரங்கள் குறித்து பேசுவதற்காக துரைமுருகனை கருணாநிதிஅனுப்பி வைத்ததாகத் தெரிகிறது.

ராசாவை சந்தித்த துரைமுருகன் பின்னர் கனிமொழியையும் சந்தித்துப் பேசினார்.

பெகுரா, பல்வா வெளிநாடு செல்ல அனுமதி:

இதற்கிடையே, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுரா, ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்பட 6 பேர் வெளிநாடு செல்ல டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: