தலையில் அடிபட்ட மனிதர் கணித மேதையாக திகழும் அதிசயம்


ஒரு விபத்து ஒரு மனிதனை முடக்கி போட்டு விடும் என்று தான் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் சில நபர்களால் மிகக் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் ஒருவர் கணித மேதையாக திகழ்வது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜசோன் பட்கெட்ஸ். 41 ஆண்டுகளுக்கு முன்பு சில ரவுடிகள் தெருவில் சென்று கொண்டிருந்த அவரைக் கடுமையாகத் தாக்கி தூக்கிப் போட்டுவிட்டனர்.
தலையில் பலத்த காயமடைந்த ஜசோனின் மூளை சேதமடைந்து விட்டது என்று மருத்துவர்கள் கூறியதால் கல்லூரிப் படிப்பை தொடர முடியாமல் போனது.
ஆனால் தற்போது கணித சூத்திரங்களை மிக தெளிவாக சொல்கிறார். புதிய சூத்திரங்களை உருவாக்குகிறார், புதிய கணித வரைபடங்களை வரைகிறார். தலையில் பலத்த அடிபட்ட ஒரு மனிதனால் இது சாத்தியமா என்றால், இதை ஒரு அரிய அற்புதம் என்று வர்ணிக்கிறது மருத்துவ உலகம்.
தலையில் பாதிப்பு ஏற்பட்டும் எப்படி அவரது மூளை இப்படி அற்புதமாக வேலை செய்கிறது என்று மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றனர் மருத்துவர்கள்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: