நிலம் புயலால் ஆபத்தில்லை.. ஆனால் இருளில் மூழ்கிப் போனது சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள்

   சென்னை: நிலம் புயல் ஏற்படுத்திய பலத்த காற்று காரணமாக சென்னையில் நேற்று காலையிலிருந்து இரவு வரை பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நகரமே இருளில் மூழ்கிப் போனது. இதனால் டிவியைப் போட முடியவில்லை, புயல் நிலவரம் குறித்து வெளியூர்களுக்குப் போன் செய்து கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் சென்னை மக்கள்.
நிலம் புயல் நேற்று மாலை கரையைக் கடந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு முதலே சென்னை உள்ளிட்ட கரையோர மாவட்டங்களில் பலத்த காற்றும், கன மழையும் பெய்யத் தொடங்கி விட்டது.
நாகப்பட்டனம், திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இருப்பினும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெரிதாக இல்லை, ஆனால் காற்றுதான் பெருமளவில் பயமுறுத்தி விட்டது.
பேய் போல ஆடிய மரங்களைப் பார்த்து மக்கள் பெரும் பீதியடைந்தனர். தானே புயல் வந்தபோது கூட இப்படித்தான் பெரிய அளவில் மழை இல்லை, ஆனால் காற்று மிகப் பலமாக வீசியது. இதனால்தான் கடலூர் மாவட்டம் மிகப் பெரிய சேதத்தை சந்திக்க நேர்ந்தது. எனவே அதுபோல இப்போதும் நேருமோ என்ற அச்சம் மக்களிடையே இருந்தது.
பலத்த காற்று காரணமாக மின்சார விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார விநியோகத்தை மின்வாரியம் துண்டித்து விட்டது. இதனால் நேற்று காலை 9 மணி முதலே நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லை. போகப் போக புறநகர்ப் பகுதிகளிலும் மின்சாரத்தை நிறுத்தி விட்டனர். இதனால் ஒட்டுமொத்த சென்னையும் இருளில் மூழ்கியது.
எங்கு பார்த்தாலும் கரண்ட் இல்லை என்பதே பேச்சாக இருந்தது. காலையில் போன மின்சாரம், பல பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் கொடுக்கப்பட்டது. சில பகுதிகளில் அதற்கு மேலும் போனது. சில புறநகர்ப் பகுதிகளில் காலை வரையிலும் கூட மின்சாரம் வரவில்லை.
சென்னை தவிர, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. புயல் கடந்து போய் சில மணி நேரம் கழிந்த பின்னரே மீண்டும் மின் விநியோகம் தொடங்கியது.
மின்விநியோகத்தை முன்னெச்சரிக்கை காரணமாகவே நிறுத்தினோம் என்று மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

நிலம் புயல் மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருக்கிறது-வானிலை மையம்

 Nilam Moves Closer Chennai Coast சென்னை: நிலம் புயல் தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருப்பதாகவும், மேலும் கரையை புயல் முழுவதுமாக கடந்து முடியும் இன்னும் 2 மணிநேரமாகும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உருவெடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு நிலம் என்றும் பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகள் கடற்பரப்பில் உருவான இந்த புயல் இலங்கையின் திரிகோணமலைக்கும் சென்னைக்கும் இடையே மையம் கொண்டிருந்தது.
நேற்று இரவு முதல் இது வேகமாக நகர்ந்து இன்று காலை சென்னைக்கு தென்கிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. தற்போது இது சென்னைக்கு தென்கிழக்கில் வந்து புயல், தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தற்போது வீசி வரும் பலத்த காற்று காரணமாக, பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி உள்ளது.
சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் ரோந்து சென்று வருகின்றனர். மேலும் உடனடி மருத்துவ உதவிக்காக ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நிலம் புயல் கரையை முழுவதுமாக கடந்து முடிக்க 2 மணிநேரத்திற்கு மேல் எடுத்து கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 5 மணிநேரத்திற்கு பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8-ம் எண் புயல் கூண்டு
சென்னை மெரினா கடற்கரையின் மணற்பரப்பு முழுவதையும் சீறிவரும் கடலலைகள் ஆக்கிரமித்திருக்கிறது. சென்னை துறைமுகத்தில் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடந்து வருவதால் சென்னை துறைமுகத்துக்கு கடுமையான பாதிப்பு இருக்கும் என்பதால் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6-ன் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பலத்த காற்று
இன்று மாலைக்குள் புதுச்சேரி- நெல்லூர் இடையே சென்னைக்கு அருகே கரையைக் கடக்க இருக்கிறது, புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. நிலம் புயல் கரையை நெருங்க நெருங்க கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி மிரட்டி வருகின்றன. இதனால் இன்றும் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லக் கூடாது என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
அலுவலகங்கள் விடுமுறை:
புயல் கரையை கடக்கும் போது சென்னையில் பலத்த சேதங்கள் ஏற்படலாம் என்பதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்யும் பணியாளர்களை மாலை விரைவில் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மாலை 3 மணிக்கு மேல் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
மின்சாரம் துண்டிப்பு
நிலம் புயலால் சென்னை நகரின் பல பகுதிகளில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் உஷாரான நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இதனிடையே தமிழகம் முழுவதும் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு அனுப்பி வைத்திருக்கிறது.

கடலின் கோரகாட்சி.


கடலின் கோரகாட்சி......உயிர் பயம் உள்ளவர்கள் இதனை காணவேண்டாம்!....கடலின் கோரகாட்சி.


புயல் எதிரொலி: கடலோர மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – முதல்வர் அறிவிப்பு

 Jaya Orders Close School Colleges Colleges சென்னை : நிலம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. மழை காரணமாக கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னைக்கு மிக அருகே தென்பகுதியில் நிலம் புயல் கரையைக் கடக்கும் என்பதால் சென்னை மாநகரம் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க கூடும். வழக்கம்போல இன்றி இம்முறை கனமழை இல்லாமல் பலத்த காற்று வீசி வருகிறது. கனமழை பெய்தால் காற்றின் வேகம் குறைந்திருக்கும். ஆனால் பலத்த காற்று வீசிவருகிறது. புயல் கரையைக் கடக்கும் போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் சென்னை மெரினா கடற்கரை பெரும் சேதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அஞ்சப்படுகிறது.
புயலின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை, பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
மின்தடை ஏற்பட்டாலும் ஜெனரேட்டர்களை பயன்படுத்தி குடிநீர் விநியோகம் செய்யவும் அவர் உத்தரவிட்டார். புயல் கரையைக் கடந்தாலும் கடலோர மாவட்டங்களில் மழையும், காற்றும் அதிகமாக இருக்கும் என்பதால் நாளை கடலோர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

ஆணாக பிறந்து, பெண்ணாக மாறி, மீண்டும் ஆணாக துடிக்கும் பரிதாபம்!

லண்டன்: நான் பிறக்கும் போது ஆணாகத்தான் பிறந்தேன். ஆனால் எனக்கு பெண்ணைப்போல மாறவேண்டும் என்று ஆசை எழுந்தது. இதனால் பெண்ணாக மாற ஆபரேசன் செய்து கொண்டேன். அதுவே சிக்கலாகிவிட்டதால் மீண்டும் ஆணாக மாறிவிடலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் - இப்படி சொன்னது யார் தெரியுமா? இங்கிலாந்திலேயே மிகக்குறைந்த வயதில் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ரியா கூப்பர்தான்.

17 வயதில் பெண்ணாக மாறிய ரியா

ரியா கூப்பர் தன்னுடைய 17 வது வயதில் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார். மார்பக வளர்ச்சிக்காக பெண்மைக்கான ஹார்மோன்களையும் உடலில் பொருத்தினார். அசல் பெண்ணைப் போலவே அழகாகவும் மாறினார். அதுதான் சிக்கலாகி விட்டது.

தொலைந்து போன அமைதி

பெண்ணாக மாறியது முதல் மன அமைதியையும், மகிழ்ச்சியை தொலைத்து நிற்கும் ரியா மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்து ஆணாக மாற முடிவு செய்துவிட்டார்.

2 முறை தற்கொலை முயற்சி

பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சையினால் பாதிக்கப்பட்ட கூப்பர்,இருமுறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இதனால் அவருக்கு மனநல மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்துள்ளனர்.

ஹார்மோன் படுத்தும் பாடு...

ஹார்மோன்களை மாற்றி அறுவை சிகிச்சை செய்த காரணத்தினால் சில சமயம் மிகவும் சந்தோசமாக உணர்கிறேன். சில நேரங்களில் டல்லாக உணர்கிறேன் என்று கூறுகிறார் ரியா. இதனால் என் குடும்பத்தினரையும், உறவுகளையும் இழந்து தவிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

காதலிக்க முடியலையே..

பிறக்கும்போது ஆணாக பிறந்து 12 வயதில் பெண்ணாக வேண்டும் என்று நினைத்தார். 15 வயதில் அவருக்கு ஆபரேசன் நடைபெற்றது. என்னதான் ஹார்மோன் ஊசி எல்லாம் போட்டாலும் சராசரி பெண்ணைப்போல யாரையும் காதலிக்க முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்.


கடந்த 2010ம் ஆண்டு பெண்ணாக மாற ஆபரேசன் செய்து கொள்வதற்கு முன் பேட்டி கொடுத்த இவர், நான் பெண்ணாக உணர்கிறேன். ஆண் உடம்பில் என்னால் நடிக்க முடியாது. எனவேதான் ஆபரேசன் செய்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது மீண்டும் ஆணாக மாற ஆசைப்படுகிறார். ஆணாக மாறவேண்டும் என்று நினைத்த உடன் முடியை எல்லாம் வெட்ட ஆரம்பித்துவிட்டார். ஆனால் இறைவனால் படைக்கப்பட்ட இயற்கை நிலையை மாற்றினால் இப்படித்தான் சங்கப்படவேண்டும் என்பதற்கு ரியாவின் வாழ்க்கையே ஒரு பாடம்.

சென்னையை நெருங்கும் நிலம் புயல்- துறைமுகத்தில் 8-ம் எண் புயல்கூண்டு ஏற்றம்!

 Nilam Moves Closer Chennai Coast சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டு தமிழகக் கடலோர மாவட்டங்களை மிரட்டிக் கொண்டிருக்கும் நிலம் புயல் தற்போது சென்னைக்கு மிக நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை துறைமுகத்தில் உச்சபட்சமான அபாய எச்சரிக்கையாக 8-வது எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது,
வங்கக் கடலில் சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உருவெடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு நிலம் என்றும் பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகள் கடற்பரப்பில் உருவான இந்த புயல் இலங்கையின் திரிகோணமலைக்கும் சென்னைக்கும் இடையே மையம் கொண்டிருந்தது. நேற்று இரவு முதல் இது வேகமாக நகர்ந்து இன்று காலை சென்னைக்கு தென்கிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. தற்போது இது சென்னைக்கு தென்கிழக்கில் 270 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இதனால் சென்னை நகரில் பலத்த காற்று வீசிவருகிறது.
சென்னை மெரினா கடற்கரையின் மணற்பரப்பு முழுவதையும் சீறிவரும் கடலலைகள் ஆக்கிரமித்திருக்கிறது. சென்னை துறைமுகத்தில் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்பதுடன் சென்னை துறைமுகத்துக்கு கடுமையான பாதிப்பு இருக்கும் என்பதால் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6-ன் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இப்படி நகரும் நிலம் புயல் இன்று பிற்பகல் முதல் மாலைக்குள் கடலூர்- நெல்லூர் இடையே கரையைக் கடக்க இருக்கிறது, புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நிலம் புயல் கரையை நெருங்க நெருங்க கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி மிரட்டி வருகின்றன. இதனால் இன்றும் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லக் கூடாது என்று ஏற்கென எசத்ரிக்கப்பட்டிருக்கிறது

“சான்டி” புயலின் கோரக் காட்சிகள்

“சான்டி” புயலின் கோரக் காட்சிகள்