ஒரு நாளைக்கு 50 கேஸ் வரலைனா... மெமோதான்: வசூல் வேட்டையைத் தடுக்க புது உத்தரவு


சென்னை: சென்னை மாநகரில் பொதுமக்களிடம் டிராபிக் போலீசார் வசூல் வேட்டை நடத்துவதைக் கட்டுப்படுத்துவதற்காக "ஒரு நாளைக்கு கட்டாயம் 50 வழக்குகள்" வந்தாக வேண்டும் என்று வினோத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்தைக் கவனிக்கிறதா? 50 கேஸ் போட்டு ஸ்பாட் பைன் வாங்குவதா? என்று டிராபிக் போலீசார் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உயர் அதிகாரிகளோ வினோத உத்தரவுக்கு சொல்லும் வியாக்யானம் தலை சுற்ற வைக்கிறது.
போக்குவரத்து போலீசார் காலை 7 மணி முதல் இரவு 11 மணிவரை பணியில் உள்ளனர். இவர்களில் பலரும் வசூல் வேட்டையில்தான் மும்முரமாக இருக்கின்றனர்.

தற்போது பணி செய்கிறார்கள். இடையில் இவர்களுக்கு 2 மணி நேரம் மதிய சாப்பாடு ஓய்வு. சப்-இன்ஸ்பெக்டர்கள் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதைவிட, வசூல் வேட்டையில்தான் அதிக கவனம் செலுத்தினார்கள். இதனை கட்டுப்படுத்த ஒரு நாளைக்கு 50 வழக்கு போடனும் என்று உத்தரவு போட்டிருக்கிறார்கள்.
அதாவது காலையிலும், மாலையிலும் போக்குவரத்து நெரிசலான நேரமான 4 மணி நேரம் இவர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டாக வேண்டும். மீதி 8 மணி நேரத்தில் 1 மணி நேரத்தில் 6 வழக்குகள் போட்டால்தான் 50 கேஸ் என்ற கணக்கை எட்ட முடியும்.
4 மணி நேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும், 8 மணி நேரத்தை வழக்குபோடும் பணியிலும் இவர்கள் கண்டிப்பாக செலவழித்தாக வேண்டும். இப்படி செய்திருப்பதால் அநியாய வசூல் வேட்டையை கண்ட்ரோல் செய்திருப்பதாக காக்கி காலரைத் தூக்கிவிடுகின்றனர் உயர் அதிகாரிகள்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: