பங்களாதேஷ்:மஸ்ஜிதில் இடி-மின்னல் தாக்கி இமாம் உள்பட 13 பேர் மரணம் !




டாக்கா:வடகிழக்கு பங்களாதேஷில் இடி-மின்னல் தாக்கி மஸ்ஜிதில் இருந்த இமாம் உள்பட 13 பேர் மரணமடைந்துள்ளனர். 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.தலைநகர் டாக்காவில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள ஸுனாம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஸரஸ்வதிபூர் கிராமத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.தகரம் மற்றும் புற்களை உபயோகித்து கட்டப்பட்டிருந்த மஸ்ஜிதின் மீது பயங்கர சத்தத்துடன் இடி-மின்னல் தாக்கியது. இவ்வேளையில் மஸ்ஜிதில்
35க்கும் மேற்பட்ட மக்கள் ரமலானின் சிறப்பு தொழுகையான தராவீஹ் தொழுகைக்காக வருகை தந்திருந்தனர். 13 பேரும் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்தனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: