ஜம்மு காஷ்மீரில் அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கம்ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இருமுறை நில அதிர்வு உணரப்பட்டது. 

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்களில் இன்று அதிகாலை அடுத்தடுத்து லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலடுக்கமானது சுமார் 9 வினாடிகள் வரை நீடித்தது.

ரிக்டர் அளவுகோலில் 5.2, 3.7 அலகுகளாக பதிவாகி இருந்தது. இந் நிலஅதிர்வில் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. 

பஞ்சாப், ஹிமாச்சல், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்றும் கூட இதேபோல் நிலநடுக்கம் உணரப்பட்டது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: