திருமணமாகி 88 ஆண்டுகளுக்கு பின்பு புகைப்படம் எடுத்து கொண்ட தம்பதி


திருமணமாகி 88 ஆண்டுகளுக்கு பின்பு சீனாவை சேர்ந்த தம்பதியர் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். சீனாவின் சிசுவான் மாகாணத்தின் நான்சோங் நகரை சேர்ந்தவர் வூ சோங்கான்(வயது 101), இவரது மனைவி வூ சோன்ஷி(வயது 103).
இவர்களுக்கு கடந்த 1924ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அந்த காலத்தில்  கேமார  பற்றி தெரியாத காரணத்தால், இவர்கள் புகைப்படம் எடுத்து கொள்ளவில்லை.
இந்நிலையில் புகைப்படம் எடுத்து கொள்ள பேரப்பிள்ளைகள் ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து இருவரும் திருமண உடை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டனர்.   

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: