கொல்கத்தாவில் கள்ளக்காதலனுடன் ஓடிய தங்கையின் தலையை துண்டித்த அண்ணன்

213

கொல்கத்தா: கொல்கத்தாவில் கள்ளக்காதலுடன் ஓடிப் போன தங்கையின் தலையைத் துண்டித்து அதனுடன் சரணடைந்த வாலிரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் மேத்தாப் ஆலம்(29). டெய்லர். அவரது தங்கை நிலோபர் பீபி(22). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நிலோபருக்கும், அக்பர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நிலோபருக்கு பிரோஸ் எனற வாலிபருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் அக்பரின் சகோதரர் தன்னை கொடுமைப்படுத்துகிறார் என்று கூறிவிட்டு தனது கள்ளக்காதலனுடன் கடந்த மாதம் 28ம் தேதி வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
இதையடுத்து இது குறித்து நிலோபரின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். இதற்கிடையே மேத்தாப் தனது தங்கை அய்யூப் நகரில் இருப்பதைக் கண்டுபிடித்து கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அங்கு சென்றார். குடும்ப மானத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு கள்ளக் காதலுனுடன் ஓடிய தங்கையைப் பார்த்ததும் அவரால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. உடனே தான் வைத்திருந்த வாளை எடுத்து தங்கையின் தலையை துண்டித்து கொன்றார்.
பின்னர் அந்த தலையை தூக்கிக் கொண்டு சென்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இது குறித்து இணை கமிஷனர் பல்லப் கன்டி கோஷ் கூறுகையில்,
பிரோஸையும் கொல்லத் திட்டமிட்டதாக மேத்தாப் தெரிவித்தார். ஆனால் மேத்தாப் அங்கு சென்ற நேரம் பிரோஸ் வீட்டில் இல்லை. நிலோபரை வெட்டும்போது பிரோஸின் உறவினர் சாபூ மேத்தாபை தடுக்க முயன்றார். இதில் சாபூவின் வலது கரம் கிட்டத்தட்ட துண்டாகிவிட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் என்றார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: