இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்தது!

இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்து 1,01,139 ஆக உயர்ந்துள்ளது. 


india coronavirus peoples ministry of health இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

இன்று (19/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,169- லிருந்து 1,01,139 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,029- லிருந்து 3,163 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 36,824- லிருந்து 39,174 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 58,802 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

india coronavirus peoples ministry of health

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 35,058 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,437 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 1,249 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதேபோல் குஜராத்தில் 11,745, தமிழகத்தில் 11,760, டெல்லியில் 10,054, ராஜஸ்தானில் 5,507, மத்திய பிரதேசத்தில் 5,236, உத்தரப்பிரதேசத்தில் 4,605, ஆந்திராவில் 2,474, தெலங்கானாவில் 1,597, கர்நாடகாவில் 1,246, கேரளாவில் 630, புதுச்சேரியில் 18 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று (18/05/2020) ஒரே நாளில் மட்டும் 4,970 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், 134 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


மத்திய பாஜக அரசின் பொதுசிவில் சட்டத்தை ஆதரிக்கிறேன்.. நடிகை குஷ்புவின் பேட்டியால் சர்ச்சை!

காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்த போதும் பொதுசிவில் சட்டத்தை தாம் ஆதரிக்கிறேன் என அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: மத்திய பாஜக அரசு கொண்டுவர முயற்சிக்கும் பொதுசிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பொதுசிவில் சட்டத்தை தாம் ஆதரிப்பதாக தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது இந்துத்துவா அமைப்புகளின் கொள்கை. இதனை பாரதிய ஜனதா கட்சி அனைத்து தேர்தல் அறிக்கைகளிலும் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுசிவில் சட்டம் மூலம் இந்துத்துவா செயல்திட்டத்தை அமல்படுத்த பாஜக முயற்சிக்கிறது என பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போதைய மத்திய பாஜக அரசு பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதையும் அக்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு, பொதுசிவில் சட்டம் அவசியம்தான்.. பெண்களுக்கு சுதந்திரம் அவசியம். ஆனால் தேர்தல் அரசியலுக்காக இதை பாஜக கையிலெடுக்கிறது என கருத்து தெரிவித்திருந்தார். அத்துடன் முத்தலாக் முறை உள்ளிட்டவைகள் குரானில் இல்லை; மனிதர்களால் உருவாக்கப்பட்டது. ஆகையால் அதை கடுமையாக எதிர்க்கிறேன் என்றார். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கிறாரே என்ற கேள்விக்கு, காலத்துக்கேற்ப மாற்றங்கள் அவசியம்... இந்த சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்... ஆனால் உத்தரப்பிரதேச தேர்தலை வைத்து இதை பாஜக கையிலெடுக்கிறது எனக் கூறினார். பொதுசிவில் சட்டத்தை உறுதியாக ஆதரிப்பேன் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியிருக்கும் இக்கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசின் பொதுசிவில் சட்டத்தை ஆதரிக்கிறேன்.. நடிகை குஷ்புவின் பேட்டியால் சர்ச்சை!

காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்த போதும் பொதுசிவில் சட்டத்தை தாம் ஆதரிக்கிறேன் என அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: மத்திய பாஜக அரசு கொண்டுவர முயற்சிக்கும் பொதுசிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பொதுசிவில் சட்டத்தை தாம் ஆதரிப்பதாக தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது இந்துத்துவா அமைப்புகளின் கொள்கை. இதனை பாரதிய ஜனதா கட்சி அனைத்து தேர்தல் அறிக்கைகளிலும் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுசிவில் சட்டம் மூலம் இந்துத்துவா செயல்திட்டத்தை அமல்படுத்த பாஜக முயற்சிக்கிறது என பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போதைய மத்திய பாஜக அரசு பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதையும் அக்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு, பொதுசிவில் சட்டம் அவசியம்தான்.. பெண்களுக்கு சுதந்திரம் அவசியம். ஆனால் தேர்தல் அரசியலுக்காக இதை பாஜக கையிலெடுக்கிறது என கருத்து தெரிவித்திருந்தார். அத்துடன் முத்தலாக் முறை உள்ளிட்டவைகள் குரானில் இல்லை; மனிதர்களால் உருவாக்கப்பட்டது. ஆகையால் அதை கடுமையாக எதிர்க்கிறேன் என்றார். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கிறாரே என்ற கேள்விக்கு, காலத்துக்கேற்ப மாற்றங்கள் அவசியம்... இந்த சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்... ஆனால் உத்தரப்பிரதேச தேர்தலை வைத்து இதை பாஜக கையிலெடுக்கிறது எனக் கூறினார். பொதுசிவில் சட்டத்தை உறுதியாக ஆதரிப்பேன் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியிருக்கும் இக்கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தலித் மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய சொன்ன தலைமை ஆசிரியை கைது செய்க: திருமாவளவன்

மதுரை: மதுரை மாவட்டத்தில் தலித் மாணவ, மாணவியர்களை கழிப்பறை சுத்தம் செய்ய சொன்ன தலைமை ஆசிரியரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக மாணிக்கவல்லி என்பவர் உள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளியின் கழிவறைகளை சுத்தப்படுவத்துவதற்கு தலித் மாணவ, மாணவிகளை அவர் நிர்பந்தித்துள்ளார். இதன்பேரில் அப்பள்ளிக் கழிவறைகளை தலித் மாணவ, மாணவியர்கள் பல ஆண்டுகளாக சுத்தம் செய்து வருகின்றனர்.
மேலும், அந்த தலைமை ஆசிரியர் கழிவறைக்குச் செல்லும் போது, தலித் மாணவ, மாணவியரை தண்ணீர் வாளியை உடன் தூக்கிச்சென்று சுத்தம் செய்ய வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நால்வழி புறச்சாலைகளை கடந்து மாணவர்களை தேநீர் வாங்கி வரவும் கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு ஆதாரமாக உள்ள புகைப்படங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறையின் மாவட்ட அலுவலர்களிடம் விசிகவினர் அளித்தனர். எனினும், அரசு தரப்பிலிருந்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசிக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அறிவுரை மட்டுமே வழங்கியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியளியை தந்துள்ளது. குறிப்பிட்ட அந்த தலைமையாசிரியரை காப்பாற்றும் நோக்கத்துடனேயே கல்வித்துறையும் செயல்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. ஆகவே, உடனடியாக அந்த தலைமையாசிரியரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தமிழக அரசு கைது செய்ய வேண்டும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

எபோலா எச்சரிக்கை: ஆப்பிரிக்காவில் இருந்து வந்த குடும்பத்திற்கு மதுரை விமான நிலையத்தில் மருத்துவபரிசோதனை

மதுரை, 

ஆப்பிரிக்கா நாட்டில் தற்போது எபோலா என்ற வகை கொடிய நோய் பரவி வருகிறது. இந்நோயால் 1200க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்துள்ளனர். இந்த நிலையில் அந்த நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.அந்ததந்த நாடுகளில் இதற்கான தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். ’எபோலா’ நோய்க்கு பயந்து நாடு திரும்பிய வண்ணம் உள்ளனர். அவர்கள் மூலம் நம் நாட்டிலும் நோய் பரவி விடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய&மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.

இதை தொஅடரந்து இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கபட்டு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு முழு சோதனை நடத்தப்படுகிறது. இது போல் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

நேற்று முன்தினம் மாலை துபாயில் இருந்து மதுரை வந்த ஜெட் விமானத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா வில் இருந்து 3 பேர் வந்தனர்

அவர்கள் டவ்லோ டிவைன் அமி (வயது45) என்பவர் தனது மகள்கள் டிபென்ட்ரி ஐராம் போபி (6), அன்ட்ரி எமிபா அப்லா (3) ஆகியோருடன் மதுரை வந்தது தெரியவந்தது.இவர் தான் படித்த கொடைக்கானல் பள்ளி நிக்ழ்ச்சியில் கலந்து கொள்ள வந்து உள்ளார். மதுரை விமான நிலைஅயத்தில் இவர்கள் 3 பேரையும் மருத்துவ குழுவினர் ரிசோதனை செய்து பார்த்தனர். அவர்களுக்கு எபோலா வைரஸ் தாக்குதல் இல்லை என தெரியவந்ததும் கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்தனர். 

ஆம் ஆத்மியில் உதயகுமாரன் - 'எளிய மக்கள் கட்சி' என்ற பெயரில் ஆம் ஆத்மி இயங்கும்!


இடிந்தகரை: ஆம் ஆத்மி கட்சியில் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் உள்ளிட்ட சிலர் இணைந்துள்ளனர்.
இந்தக் கட்சி தமிழகத்தில் எளிய மக்கள் கட்சி என்ற பெயரில் இயங்கவுள்ளது. இதனை இடிந்தரையில் இன்று செய்தியாளர்களிடையே அறிவித்தார் உதயகுமாரன்.

ஆம் ஆத்மியில்  உதயகுமாரன் - 'எளிய மக்கள் கட்சி' என்ற பெயரில் ஆம் ஆத்மி இயங்கும்!
இதுதொடர்பாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை...
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரானப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சமுதாயத் தலைவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சில அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கப் போராளிகள் தேர்தல் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.
அணுமின் எதிர்ப்புப் போராட்டத்தை கொள்கைகள் வகுக்கும் தளங்களில் தொடர்ந்து நடத்தவும்; தமிழகமெங்கும் திணிக்கப்படும் மக்கள் விரோத, இயற்கை அழிப்புத் திட்டங்களை தடுத்து நிறுத்தவும்; வருங்காலத் தலைமுறைகளுக்கு தமிழகம் பாதுகாப்பானதாக நீடித்த நிலைத்த வளர்ச்சி கொண்டதாகவும் இருக்கவுமே இந்த முடிவை நாங்கள் எடுக்கிறோம்.
தமிழகமெங்கும் மேற்கொள்ளப்படும் ஆபத்தானத் திட்டங்களை காங்கிரசுக் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் ஒருமுகமாக ஆதரிக்கின்றனர். எனவேதான் போராடும் மக்கள் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஒரு மாற்றைத் தேடுகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சி இந்திய இளைஞர்களின் கவனத்தைக் கவர்ந்து, அரசியல் கனவுகளையும் உருவாக்கிக் கொண்டிருப்பதால், அது ஒரு மாற்றாகப் பார்க்கப்படுகிறது. இக்கட்சியின் தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் கப்பற்படை தளபதி அட்மிரல் ராமதாசு, லலிதா ராமதாசு போன்றவர்கள் பலமுறை இடிந்தகரைக்கு வந்திருக்கின்றனர், எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக அணுஉலைக்கு ஆதரவான காங்கிரசு, பாரதிய ஜனதா கட்சி போன்றவற்றோடு கூட்டணி வைக்காமல் தனித்து நிற்கின்றனர். இன்னோரன்ன காரணங்களால் ஆம் ஆத்மி கட்சி இயல்பான தோழமைக் கட்சியாகிறது.
ஆம் ஆத்மியில்  உதயகுமாரன் - 'எளிய மக்கள் கட்சி' என்ற பெயரில் ஆம் ஆத்மி இயங்கும்!
தங்கள் பகுதியில் நிறுவப்படும் அணுமின் நிலையம் போன்ற ஓர் ஆபத்தான திட்டத்தால் பாதிப்புக்குள்ளாகும் உள்ளூர் மக்கள்தான் அவற்றை நிறுவுவதில் இறுதி முடிவு எடுக்க முடியும் என்று ஆம் ஆத்மி கட்சி ஒரு தெளிவான நிலையை எடுத்திருக்கிறது. இந்தியாவுக்கு அணுசக்தி வேண்டுமா, வேண்டாமா எனும் கேள்விக்கு பரந்துபட்ட மக்கள் விவாதம் நடத்தி தக்க நேரத்தில் முடிவெடுக்க ஆம் ஆத்மி கட்சி உறுதியளிக்கிறது.
"ஆம் ஆத்மி கட்சி" என்றப் பெயரைக் கொண்டிருந்தாலும், கட்சித் தலைமை தமிழ் மக்களுக்கு ஏற்றவகையில் தமிழ்ப் பெயரை பயன்படுத்த எங்களுக்கு அனுமதியளிக்கிறது. எனவே மீனவர்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், தலித் மக்கள், சிறுபான்மையோர் உள்ளிட்ட எளிய மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் வகையில் "எளிய மக்கள் கட்சி (AAP)" என்ற பெயரை பயன்படுத்தவிருக்கிறோம்.
சமூகத்தில் பலவீனப்பட்டிருக்கும் பெண்கள், குழந்தைகள், முதியோர் போன்றோரின் நலன்களையும் "எளிய மக்கள் கட்சி (AAP)" கரிசனத்துடன் பாதுகாக்கும்.
இலங்கை அரசிடமும் இராணுவத்திடமும் சிக்கித் துன்புறும் ஈழத் தமிழரின் இன்னல்களையும், தமிழ் மீனவர்கள் மீது இலங்கை இராணுவம் அத்துமீறி நடத்தும் தாக்குதல்களையும் "எளிய மக்கள் கட்சி (AAP)" மிகுந்த சிரத்தையுடனும், அக்கறையுடனும் கண்ணுறுகிறது. இந்திய அரசு இப்பிரச்சினைகள் சம்பந்தமாக இலங்கை அரசையும், சர்வதேச சமூகத்தையும் கண்டிப்பான முறையில் அணுகியிருக்க வேண்டும் என்று "எளிய மக்கள் கட்சி (AAP)" கருதுகிறது.
எங்களுடைய அரசியல் உணர்வுகளும், உணர்திறன்களும், புரிதல்களும், கொள்கைகளும் ஆம் ஆத்மி கட்சியால் ஏற்றுக்கொள்ளப்படுவதாலும், மதிக்கப்படுவதாலும், இடிந்தகரைப் பகுதி எளிய மக்களாகிய நாங்கள் புதிய தலைவர்களோடும், புதிய கனவுகளோடும், புதிய நம்பிக்கைகளோடும் ஓர் அரசியல் பயணத்தைத் துவக்குகிறோம். "எளிய மக்கள் கட்சி (AAP)" உறுப்பினர்களாக இணைகிறோம் என்று அவர் கூறினார்.




25 ஆண்டுகளுக்குப் பிறகு வட இலங்கையில் இன்று தேர்தல்.. விறு விறு வாக்குப்பதிவு!

25 ஆண்டுகளுக்குப் பிறகு வட இலங்கையில் இன்று தேர்தல்.. விறு விறு வாக்குப்பதிவு!கிளிநொச்சி: 25 ஆண்டுகளுக்கு பிறகு, இலங்கை தமிழர் பகுதியில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர், கடந்த 2009-ம் ஆண்டு ஒரு பெரும் இனப்படுகொலையுடன் முடிந்தது. அதன்பிறகு, இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில் முதல் முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு வட இலங்கையில் இன்று தேர்தல்.. விறு விறு வாக்குப்பதிவு!

அத்துடன் வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. 

3 மாகாணங்களிலும் மொத்தம் 43 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 24 ஆயிரம் போலீசார் உள்பட 40 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

மிக அதிக அளவில், யாழ்ப்பாணத்தில் 7 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. இந்த கட்சிக்கு முக்கிய போட்டியாக, அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. 

தமிழ் தேசிய கூட்டணியின் தலைமை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாணத்தில் உள்ள 36 தொகுதிகளில் மொத்தம் 906 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது ராணுவத்தினர் மிகவும் கெடுபிடியில் ஈடுபட்டு வருவதாக, தமிழர் கட்சி சார்பில் புகார் கூறப்பட்டு வந்தது. 

சில தொகுதிகளில் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் ராணுவத்தினர் பிரசாரம் செய்தனர். ராணுவமே சில வேட்பாளர்களைக் களமிறக்கியும் உள்ளது.

 இந்திய ஓட்டுப்பெட்டி

இலங்கையில் மரத்தினால் ஆன ஓட்டுப்பெட்டிகளை தேர்தலுக்கு பயன்படுத்துவது வழக்கம். இந்த தேர்தலில் முதல் முறையாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஓட்டுப்பெட்டிகள், பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டது.

25 ஆண்டுகளுக்கு பிறகு...

வரலாற்றுச் சிறப்பு மிக்க வடக்கு மாகாண தேர்தல், 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. கடந்த 1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி, மாகாண கவுன்சில்கள் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு முதன் முதலில் 1988-ம் ஆண்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. 

அப்போது, தனித் தமிழ் ஈழம் கோரி, விடுதலைப்புலிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம் தீவிரம் அடைந்திருந்ததால் ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டுமே தேர்தலில் போட்டியிட்டது

எச்.ஐ.வி.,யை அழிக்க புதிய மருந்து: அமெரிக்க ஆய்வாளர்கள் சாதனை

வாஷிங்டன்: அமெரிக்க ஆய்வாளர்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும், புதிய மருந்துப் பொருளை, கண்டுபிடித்து உள்ளனர்.

எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான, எச்.ஐ.வி., வைரசை அழிப்பதில், மருத்துவர்களும், மருந்துப் பொருள் தயாரிப்பாளர்களும், இன்னும் தங்கள் ஆய்வில், 100 சதவீத வெற்றியை அடையவில்லை என்றே கூறலாம். அமெரிக்காவில் உள்ள, மின்னிசோட்டா பல்கலைக்கழக மருந்துப்பொருள் தயாரிப்புத் துறை ஆய்வாளர்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும் மருந்துப் பொருளைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களின் ஆராய்ச்சியின் பலனாக, எச்.ஐ.வி.,யைக் கட்டுப்படுத்தும், இரு திரவ மருந்துகளின் கலவையில் புதிய மருந்துப் பொருளைக் கண்டுபிடித்து உள்ளனர்.

ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ளதாவது: புற்று நோயைக் கட்டுப்படுத்த, "டெசிடேபைன், கெம்சிடேபைன்' என்ற இரு திரவ மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துப் பொருட்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளன. இந்த மருந்துகள், நோயாளிகளுக்கு, ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இதனால், பெரும் நேர விரயமும், பொருட் செலவும் ஏற்படுகிறது. இந்த சிகிச்சை பெறும் நோயாளிகள், சிகிச்சை முடியும் வரை, எவ்வித வேலையிலும் ஈடுபட முடியாமல், படுக்கையிலேயே இருக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால், இந்த இரு மருந்துப் பொருட்களையும் ஒன்றாக்கி, மாத்திரை வடிவில் புதிய மருந்துப் பொருள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், நோயாளிகளின், பொருள் மற்றும் நேரம் மிச்சப்படுத்தப்படும். எனினும், முதற்கட்ட சோதனைகளுக்குப் பின்னரே, நோயாளிகளுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படும். புதிதாக உருவாக்கப் பட்டுள்ள மருந்து, சோதனையில் வெற்றி பெற்றால், எய்ட்ஸ் நோய்க்கான மருந்துப் பொருள் தயாரிக்கும் ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல் கல்லாய் அமையும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அம்மா குடிநீர் .. தொடங்கி வைத்தார் ஜெயலலிதா

சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் அம்மா குடிநீர் அறிமுகமாகியுள்ளது. இந்தத் திட்டம் மற்றும் குடிநீர் விற்பனையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். 

விலையில்லா அரிசி, குறைந்த விலையில் பருப்பு, பாமாயில் திட்டம், அம்மா உணவகம் ஆகியவற்றின் வரிசையில் தற்போது அம்மா குடிநீரும் இணைகிறது. 

இதேபோல மலிவு விலை காய்கறித் திட்டமும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது நினைவிருக்கலாம்.

மாநகராட்சிகளில் அம்மா உணவகம் 

தமிழக மாநகராட்சிகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு குறைந்த விலையில் இட்லி, சாம்பார் சாதம், தயிர்ச் சாதம், கரிவேப்பிலை சாதம் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன.

மலிவு விலை காய்கறிக் கடைகள் 

அதேபோல காய்கறி விலைகளை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 31 ‘பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் அதாவது மலிவு விலை காய்கறி கடைகளையும் முதல்வர் தொடங்கி வைத்து அவையும் சிறப்பாக செயல்படுகின்றன.

அம்மா குடிநீர்

இந்த வரிசையில் தற்போது அம்மா குடிநீர் இணைகிறது. ஏழை, எளிய மக்கள் நலனை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையங்களை அமைக்க கடந்த ஜூன் 21-ந்தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இன்று முதல் தொடக்கம்

அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டு, விற்பனையும் அன்றைய தினமே தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று முதல் இத்திட்டம் தொடங்குகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நிதிச்சுமையை ஓரளவு குறைக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவும் வழிவகுக்கும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று அம்மா குடிநீர் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். வீடியோ கான்பரன்சிங் மூலமாக அவர் இதைத் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்திற்காக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா குடிநீர் உற்பத்தி நிலையத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். பின்னர் அம்மா குடிநீர் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.  

10 ரூபாய்க்கு ஒரு லிட்டர் 

இந்த நிலையத்தில், நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் குடிநீர் அம்மா குடிநீர் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.

நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், சென்னை மாநகரில் உள்ள அனைத்து பஸ் நிலையங்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள பஸ் நிலையங்களிலும் ஒரு லிட்டர் பாட்டில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு நீண்ட தூரம் செல்லும் அரசு பஸ்களிலும் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

உலகின் வயதான மனிதரான ஷார்ட்டி 112வது வயதில் நியூயார்க்கில் மரணம்

உலகின் வயதான மனிதரான ஷார்ட்டி 112வது வயதில் நியூயார்க்கில் மரணம் நியூயார்க்: உலகின் வயதான மனிதரான ஷார்ட்டி தனது 112வது வயதில் நியூயார்க்கில் மரணம் அடைந்தார். 

உலகின் வயதான மனிதர் ஸ்பெயின் வம்சாவளியைச் சேர்ந்த சலுஸ்டியானோ சான்சேஸ்-பிளாஸ்கெஸ்(112). அவரின் பட்டபெயர் ஷார்ட்டி. அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்து வந்தார். அவர் கடந்த 1901ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி ஸ்பெயினில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தார். அவர் தனது நண்பர்களுடன் கடந்த 1918ம் ஆண்டு கியூபா சென்றார். அங்குள்ள வயல்களில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு அவர் எல்லிஸ் தீவு வழியாக அமெரிக்காவுக்கு வந்தார். 

அவர் லின்ச் மற்றும் கென்டுக்கி ஆகிய இடங்களில் உள்ள நிலக்கரி சுரங்களில் வேலை செய்தார். இறுதியாக அவர் நியூயார்க்கில் உள்ள நயாக்ரா நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்று அங்கு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த 1934ம் ஆண்டு அவர் பேர்ல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

உலகின் வயதான மனிதராக கருதப்பட்ட ஜிரோமோன் கிமுரா கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி மரணம் அடைந்ததையடுத்து ஷார்ட்டி உலகின் வயதான மனிதர் என்ற பெருமையை அடைந்தார். 

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஷார்ட்டி நியூயார்க் அருகே உள்ள கிராண்ட் தீவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். 

ஷார்ட்டி திருமணம் மற்றும் கிராமத்து கொண்டாட்டங்களில் இசைக் கருவிகளை வாசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.